News March 23, 2025
இந்தியாவிற்கு எதற்கு கடற்படை? சீமான் ஆவேசம்

இலங்கை கடற்படையிடம் இருந்து குடிமக்களை காப்பாற்ற திறனற்ற இந்தியாவிற்கு எதற்கு கடற்படை என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். உலகில் எந்த நாட்டு ராணுவமும், தம் சொந்த நாட்டு மீனவரை சுட்டுக் கொல்வதை வேடிக்கை பார்க்குமா எனவும் அவர் வினவியுள்ளார். குஜராத் மீனவரை பாகிஸ்தான் சுட்டுக் கொன்றால், கொலை வழக்கு பதிந்து ஐநா வரை செல்லும் ஆட்சியாளர்கள், தமிழக மீனவர்கள் என்றால் அமைதி காப்பதாகவும் சாடியுள்ளார்.
Similar News
News July 9, 2025
கோட்சே வழியில் மாணவர்கள் சென்றுவிடக்கூடாது: ஸ்டாலின்

காந்தி, அம்பேத்கர், பெரியார் வழியில் செல்லாமல், கோட்சே கூட்டத்தின் வழியில் மாணவர்கள் செல்லக்கூடாது என்று CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருச்சி ஜமால் முகமது கல்லூரி பவள விழாவில் பேசிய அவர், மாணவர்களுக்கு அரசியல் புரிதல் அவசியம் என்றார். தமிழகத்தைக் காக்க மாணவர்கள் ஓரணியில் நிற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். விரைவில் 20 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
News July 9, 2025
அபார்ட்மென்டில் அழுகிய நிலையில் கிடந்த நடிகை!

பாகிஸ்தான் பிரபல நடிகையும், மாடலுமான ஹுமாயிரா அஸ்கர்(32) கராச்சியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் அழுகிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். ஹுமாயிராவின் வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதால் அக்கம் பக்கத்தினர் அளித்த தகவலின் பேரில் போலீசார், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி அடைந்தனர். ‘Jalaibee’, ‘Aik Tha Badsha’ உள்ளிட்ட ஏராளமான படங்களில் ஹுமாயிரா நடித்துள்ளார். #RIP
News July 9, 2025
4 நாள்களுக்கு ஒரு தடவை தாடிக்கு டை அடித்தால்..

டெஸ்ட் கிரிக்கெட்டில் கோலி இன்னும் சில காலம் விளையாடி இருக்க வேண்டும் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். இது குறித்து விம்பிள்டன் போட்டியை காண வந்த அவரிடம் செய்தியாளர் கேள்வி எழுப்பினர். அதற்கு கோலி, 4 நாள்களுக்கு ஒரு முறை தாடிக்கு டை அடிக்க தொடங்கிவிட்டால், ஓய்வு பெற அதுவே சரியான டைம் என குறிப்பிட்டு, தான் 2 நாள்களுக்கு முன்னர் தான் டை அடித்ததாக கிண்டலாக பதிலளித்தார்.