News May 29, 2024

அழும்போது கண்களில் நீர் வருவது ஏன்? (2/3)

image

துக்கம், பயம், மகிழ்ச்சி ஆகிய நேரங்களில் கண்களில் நீர் பெருக்கெடுக்கும். அப்போது உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் மூளையின் ஒருபகுதி, கண்ணீரை கட்டுப்படுத்தும் மூளையின் இன்னொரு பகுதியான லிம்பிக்கிற்கு சிக்னல் கொடுக்கும். அது நரம்பு மண்டலத்தை தூண்டி, கண்களில் நீரை வரச் செய்யும். இதுபோன்ற அழுகையின்போது, கண்களுக்குள் சேமித்து வைப்பதைக் காட்டிலும் அதிக நீர் சில நிமிடங்களிலேயே வழிந்தோடும்.

Similar News

News September 6, 2025

BREAKING: செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை?

image

தலைமையின் அனுமதியின்றி, கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதாக கூறி செங்கோட்டையன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கலாமா என்பது குறித்து EPS ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. திண்டுக்கல்லில், இன்று காலை <<17627735>>மூத்த தலைவர்களுடன்<<>> அவசர ஆலோசனையில் ஈடுபட்ட அவர், செங்கோட்டையனின் பேச்சு தொடர்பாக, அவர்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துள்ளார். மேலும், மற்ற தலைவர்களுடனும் அவர் ஆலோசனை நடத்த உள்ளாராம்.

News September 6, 2025

மோடியின் அமெரிக்க பயணம் ரத்து

image

நியூயார்க்கில், இம்மாத இறுதியில் நடைபெறும் ஐநாவின் பொதுசபை கூட்டத்தில், PM மோடி கலந்துகொள்ள இருந்தார். ஆனால் அந்த பயணம் ரத்தாவதாக சமீபத்தில் செய்தி வந்தது. தற்போது அதை உறுதிப்படுத்தும் வகையில் பேச்சாளர்கள் பட்டியலில், மோடியின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. அதற்கு பதில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பார் என தெரிகிறது. பயணம் ரத்தானதற்கு டிரம்ப்பின் வரி விதிப்பும் ஒரு காரணம் என கூறப்படுகிறது.

News September 6, 2025

சிலிண்டர் சீக்கிரமா காலியாகிறதா?

image

◆அரிசி, பருப்பு, சுண்டல் போன்றவற்றை நீரில் ஊற வைத்து, அடுப்பில் வைத்தால் சீக்கிரமாக வெந்து விடும் ◆சின்ன வளைவான பாத்திரங்களை பயன்படுத்தினால், தீ வேகமாக பரவி சமையல் சீக்கிரம் முடியும் ◆பர்னர் சுத்தமாக இருக்கிறதா என்பதை கவனியுங்கள் ◆பாத்திரங்களை கழுவியவுடன், ஈரத்தோட அடுப்பில் வைக்காதீர்கள் ◆பிரிட்ஜில் இருந்து எடுத்த காய்கறிகளை சிறிது நேரம் வெளியில் வைத்துவிட்டு உபயோகப்படுத்தவும். SHARE IT.

error: Content is protected !!