News May 24, 2024
பசியோடு இருக்கும் போது கோபம் வருவது ஏன்?

பசியோடு இருப்போருக்கு கோபம் அதிகம் வருவதை பார்த்திருப்போம். இதற்கு பல காரணங்களை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். பசியோடு இருக்கையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைவதால், ஹார்மோன் அட்ரிலின், கார்டிசோல் சுரந்து அதை சரி செய்யும், அப்போது எரிச்சல் ஏற்படும் என அவர்கள் கூறுகின்றனர். சர்க்கரை அளவு குறைகையில் மூளை நியூரோபெப்டைட் ஒய் ரசாயனத்தை சுரப்பதாலும் கோபம் வருவதாக தெரிவிக்கின்றனர்.
Similar News
News August 17, 2025
நடிகை மினு முனிர் வழக்கில் திடுக்கிடும் தகவல்

நடிகை மினு முனீர் அண்மையில் போக்சோ சட்டத்தில் கைதானார். இது தொடர்பாக போலீசார் விசாரிக்கும் சூழலில், ஒரு திடுக்கிடும் தகவல் வெளியாகிவுள்ளது. அதில், பாதிக்கப்பட்ட இளம்பெண் சம்பவம் நடந்த போது சிறுமியாக இருந்ததால் சென்னையில் தங்கிய வீடு, குற்றவாளிகள் அடையாளம், ஓட்டல் குறித்த விவரங்களை மறந்துள்ளதாகவும், இதனால் வழக்கை அடுத்தக்கட்டத்துக்கு கொண்டு செல்ல முடியாமல் போலீசார் திணறுவதாகவும் கூறப்படுகிறது.
News August 17, 2025
சுவாமி விவேகானந்தரின் பொன்மொழிகள்

* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* அடிமைகளின் குணமாகிய பொறாமையை முதலில் அழித்துவிடு.
* உன்னை நீயே பலவீனன் என்று நினைத்துக் கொள்வது மிகப் பெரிய பாவம்.
* சோம்பேறித்தனத்தை எந்த வழியிலும் துரத்தியாக வேண்டும். சுறுசுறுப்பு என்பதற்கு எதிர்ப்பது என்பது பொருள்.
* கீழ்ப்படியக் கற்றுக்கொள். கட்டளையிடும் பதவி தானாக உன்னை வந்து அடையும்.
News August 17, 2025
அந்த கூலியும் காலி, இந்த கூலியும் காலி: சீமான்

துப்புரவுப் பணிகளை கூட தனியாரிடம் ஒப்படைத்தால், மாநகராட்சி எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். 6 அறிவிப்புகளை வெளியிட்ட CM ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தூய்மை பணியாளர்கள் பேரணி சென்றது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, அந்த நிகழ்வின் இயக்குநர் மேயர் பிரியா என்றும், அதனை அவர் சரியாக இயக்கவில்லை என்றார். ரஜினியின் கூலியும் காலி, மேயர் பிரியா இயக்கிய இந்த கூலியும் காலி என விமர்சித்தார்.