News February 16, 2025
கடவுளை ஏன் பூக்களை வைத்து வணங்குகிறோம்?

கடவுளை வணங்கும் போது, பூக்களை வைத்தே வணங்குகிறோம். இது ஏன் என்ற கேள்வி எழுந்ததுண்டா? இந்துபுராணங்களின் படி, அனைத்து கடவுள்களும் பூக்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பூக்களின் நறுமணம் கடவுள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஐதீகம். மேலும் , பூக்களைச் சமர்பிப்பதன் மூலம், ஒருவருக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.
Similar News
News March 23, 2026
கடன் தள்ளுபடி இல்லை.. நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதற்கான எந்த திட்டமும் மத்திய அரசிடம் இல்லை என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பார்லிமெண்டில் அறிவித்துள்ளார். அதேநேரம், கிசான் கடன் அட்டை மூலம் வட்டி மானிய திட்டத்தில் போதுமான அளவு பயிர்க் கடன் வழங்கப்பட்டு வருவதாகவும், கடனை சரியான நேரத்தில் திருப்பிச் செலுத்துவோருக்கு கூடுதல் சலுகைகள் அளிக்கப்படுவதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
News March 23, 2026
முகம் Dull-ஆவே இருக்கா? ஒரு பொருள் போதும்

என்ன செய்தாலும் முகம் Dull-ஆகவே இருக்கிறதா? முகத்தைப் பொலிவாக வைக்க பச்சைப் பால் போதும். இதற்கு, முதலில் முகத்தை நன்றாகக் கழுவ வேண்டும். பிறகு, இரண்டு டீஸ்பூன் பச்சைப் பாலில், சிறிது தேன் கலந்து நன்றாகக் கலக்கி, அதை முகத்தில் பூச வேண்டும். 15 நிமிடங்கள் கழித்து, தண்ணீரில் முகத்தைக் கழுவ வேண்டும். இதை, தொடர்ந்து செய்து வந்தால் முகம் பொலிவுடன் இருக்கும். SHARE.
News March 23, 2026
சாத்தான்குளம் வழக்கில் நெஞ்சை உலுக்கும் உண்மைகள்!

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான 9 போலீசாரும் குற்றவாளிகள் என கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அதில் நீதிபதி குறிப்பிட்ட முக்கிய விவரங்கள் இவை: *ஜெயராஜ், பென்னிக்ஸ் உடலில் இருந்த காயங்கள் இயற்கைக்கு மாறானது. *நாம் அடித்து பழகுவதற்கு அப்பா – மகன் கிடைத்துள்ளனர்; அடித்து பயிற்சி எடுப்போம் என போலீசார் பேசியுள்ளனர். *இரவு முழுவதும் 10 நிமிடம் இடைவெளி விட்டு கம்பு, கம்பியால் கொடூரமாக தாக்கியுள்ளனர்.


