News February 16, 2025

கடவுளை ஏன் பூக்களை வைத்து வணங்குகிறோம்?

image

கடவுளை வணங்கும் போது, பூக்களை வைத்தே வணங்குகிறோம். இது ஏன் என்ற கேள்வி எழுந்ததுண்டா? இந்துபுராணங்களின் படி, அனைத்து கடவுள்களும் பூக்களில் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும், பூக்களின் நறுமணம் கடவுள்களுக்கு மிகவும் பிடிக்கும் என்பது ஐதீகம். மேலும் , பூக்களைச் சமர்பிப்பதன் மூலம், ஒருவருக்கு மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் செய்த பாவங்களிலிருந்து விடுதலை கிடைக்கும் என்ற நம்பிக்கை தொடர்ந்து வருகிறது.

Similar News

News September 12, 2025

இலங்கையில் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு: இந்தியா

image

இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை ஏற்படுத்த வேண்டும் என்று ஐ.நா., சபையில் இந்தியா வலியுறுத்தியுள்ளது. அந்நாட்டின் இறையாண்மை, ஒற்றுமையை மதிப்பதாக தெரிவித்த இந்தியா, தமிழர்களின் சமத்துவம், நீதி, அமைதி ஆகிய கோரிக்கைகளுக்கு ஆதரவளிப்பதாகவும் கூறியுள்ளது. முன்னதாக, 2015, ஜன.9-க்கு முன்பு அகதிகளாக இந்தியாவிற்குள் வந்த இலங்கை தமிழர்களை சட்டப்பூர்வமாக தங்க இந்தியா அனுமதி அளித்திருந்தது.

News September 12, 2025

உடல் வலுபெற இந்த யோகா காலையில் பண்ணுங்க!

image

*தரையில் நேராக நிற்கவும்.
*பிறகு ஒரு காலை மட்டும் முன்னால் வைத்து, மற்றொரு காலை பின்னால் வைக்கவும்.
*முன் காலின் பாதங்களை ஊன்றி, பின்காலின் விரல்களை மட்டும் ஊன்றி வைக்கவும்.
*2 கைகளையும் மேலே எழுப்பி ஒன்றிணையுங்கள்.
*இந்தநிலையில் 25- 30 விநாடிகள் வரை இருந்துவிட்டு மீண்டும் பழைய நிலைக்கு திரும்பவும். இதேபோல, கால்களை மாற்றி செய்யவும்.
அனைத்து தசைகளும் வலுபெற இந்த வீரபத்ராசனம் உதவும்.Share it.

News September 12, 2025

பெரியாரை கற்றதால் திமுகவுக்கு ஆதரவு: திருமா

image

விசிகவை திமுக மெல்ல மெல்ல விழுங்கி விடும் என்று EPS சமீபத்தில் கூறியிருந்தார். இதனையடுத்து, திமுகவுடன் தான் ஏன் கூட்டணி வைத்தேன் என திருமா தொடர்ந்து விளக்கம் கொடுத்து வருகிறார். அந்த வகையில், பெரியாரை பயின்றதால் திமுகவை ஆதரிப்பதாக திருமா தெரிவித்துள்ளார். மேலும், 2 சீட்டுகளுக்காக திமுகவுடன் கூட்டணி வைத்தேன் என்று சொல்பவர்களால், அந்த சீட்டை கூட வாங்க முடியவில்லை என்றும் காட்டமாக கூறியுள்ளார்.

error: Content is protected !!