News September 20, 2025
ரேபிஸ் தடுப்பூசி போட்டும் உயிரிழப்பது ஏன்?

நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்களில் சிலர், ரேபிஸ் தடுப்பூசி போட்டும், உயிரிழந்தது குறித்து பொது சுகாதாரத்துறை ஆய்வு செய்து வருகிறது. தமிழகத்தில் இந்தாண்டில் 3.80 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 22 பேர் உயிரிழந்துள்ளனர். எனவே தடுப்பூசி வேலை செய்யவில்லை என கூற முடியாது எனவும், உயிரிழந்தவர்கள் முறையான சிகிச்சை பெற்றனரா என்பது ஆய்வு செய்யப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Similar News
News September 20, 2025
சத்தான காலை உணவுகள்

காலை உணவு, நாள் முழுவதும் அதிகப்படியாக சாப்பிடுவதைத் தடுத்து, சீரான உடல் எடையைப் பராமரிக்க உதவும். காலை உணவைத் தவிர்ப்பதால், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைபாடு ஏற்படலாம். மேலே, சில சத்தான காலை உணவுகள் போட்டோக்களாக உள்ளன. அவற்றை ஒவ்வொன்றாக பாருங்க. நீங்கள் காலை என்ன சாப்பிடுறீங்க? கமெண்ட்ல சொல்லுங்க.
News September 20, 2025
தங்கம் விலை 2 மடங்காக அதிகரிக்கும்

கடந்த மூன்று நாள்களாக குறைந்து கொண்டே வந்த ஆபரணத் தங்கம் விலை நேற்று மீண்டும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது 3,700 டாலராக இருக்கும் ஒரு அவுன்ஸ் தங்கம் 2 மடங்காக அதிகரிக்கும் என்று ஜெஃப்ரிஸ் என்ற அமெரிக்கா நிறுவனம் கணித்துள்ளது. அதாவது, சர்வதேச சந்தையில் தங்கம் விலை ஒரு அவுன்ஸ் 6,600 டாலர்களாக உயரக்கூடும் என தெரிவித்துள்ளது. இதனால், தங்கம் விலை இனி ஏற்றத்துடனே இருக்கும் என கூறப்படுகிறது.
News September 20, 2025
நயினார் மீது பாஜகவினர் அதிருப்தி?

பாஜகவில் மகன் பாலாஜிக்கு விளையாட்டு & திறன் மேம்பாட்டு அமைப்பாளர் பதவி வழங்கினார் நயினார். இதனால் வாரிசு அரசியலை எதிர்க்கும் பாஜகவினர் அதிருப்தியடைந்தனர். இந்நிலையில், அடுத்த தலைவர் நான் தான் என்பதுபோல கறார் காட்டி வருகிறாராம் பாலாஜி. இதனால் கடுப்பான பாஜகவினர் நயினாரிடம் புகாரளிக்க, அவர் புகாரளிப்பவர்களையே கண்டிப்பதாக கூறப்படுகிறது. டெல்லி தலைமைக்கு இதுபற்றி ரிப்போர்ட் பறக்குமா?