News August 7, 2025
காலையில் மாரடைப்பு அதிகம் ஏற்படுவது ஏன்?

காலை 6 மணி- 11 மணி வரையில் தான் அதிகமாக மாரடைப்பு ஏற்படுகிறது. அந்த நேரத்தில் உடலில் ஸ்ட்ரெஸ் ஹார்மோன் , ரத்தம் & இதய அழுத்தம் அதிகரிக்கிறது. மேலும், ரத்தம் இறுகி, தடிமனாக இருப்பதால், குழாய்களில் தடை ஏற்பட்டு மாரடைப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. முதலில் நினைவில் கொள்ளுங்கள், உடல் உழைப்பின்றி இருப்பவர்களுக்கு திடீரென தூக்கத்திலிருந்து அதிர்ந்து போய், எழுவதும் அதிக அழுத்தம்தான்.
Similar News
News August 7, 2025
SPORTS ROUND UP: ரோஹித்தான் பெஸ்ட் கேப்டன்!

◆ரோஹித் தான் பெஸ்ட் IPL கேப்டன் என நிதிஷ் ராணா தெரிவித்துள்ளார்.
சின்சினாட்டி (அமெரிக்கா) ஓபன் டென்னிஸ் இன்று தொடங்குகிறது
◆தீ விபத்தால் தள்ளிவைக்கப்பட்ட சென்னை கிராண்ட்மாஸ்டர்ஸ் செஸ் போட்டி இன்று தொடங்குகிறது
◆காயம் காரணமாக ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டியில் இருந்து நியூசிலாந்தின் டாம் லாதம் விலகியுள்ளார்.
News August 7, 2025
அரசு பொது விடுமுறை: ஆக.15-ல் கிராம சபைக் கூட்டம்

அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 15-ம் தேதி சுதந்திர தின விடுமுறை தினத்தன்று கிராம சபைக் கூட்டம் நடத்த கலெக்டர்களுக்கு ஊரக வளர்ச்சித்துறை ஆணையர் பொன்னையா உத்தரவிட்டுள்ளார். இதில், தூய்மையான குடிநீர் வழங்குவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தியுள்ளார். அந்தந்த பகுதியில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்று உங்கள் ஊர் பிரச்னைகள், வரவு செலவு கணக்குகளை தெரிந்து கொள்ளுங்கள் மக்களே..!
News August 7, 2025
மனித குலத்தின் இருண்ட நாள்!

1945 ஆகஸ்ட் 6.. மனித இனத்தின் இருண்ட நாள். ஹிரோஷிமா நகரம் மீது அணுகுண்டு வீசப்பட்டது. பெரும் சத்தத்தில் ஆயிரக்கணக்கான உயிர்கள் சாம்பலாகின. இதில் உயிரிழந்தோரை விட, உயிரோடு இருந்தவர்களின் வேதனையே பெரிது. அந்த துயரமும், கொடூரமும் யாரும் மன்னிக்கவே முடியாத ஒரு மனிதப்பிழை. இந்த நாளில் மனதில் எழும் ஒரே கேள்வி, இந்த கொடுமையை பார்த்த பிறகும், உலகம் இன்னும் போருக்கு ஏன் ஆயத்தமாகவே இருக்கிறது?