News August 12, 2024
செபி தலைவர் ஏன் ராஜினாமா செய்யவில்லை? ராகுல்

செபி தலைவர் மதாபி புரி புச் ஏன் இன்னும் ராஜினாமா செய்யவில்லை? என ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். செபியின் நேர்மை, தலைவர் மீதான குற்றச்சாட்டுகளில் சமரசம் செய்யப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டிய அவர், முதலீட்டாளர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை இழந்தால் யார் பொறுப்பு? எனவும், நாடாளுமன்றக் கூட்டுக் குழு விசாரணைக்கு பிரதமர் ஏன் பயப்படுகிறார்? என்றும் அவர் சரமாரியாக விமர்சித்துள்ளார்.
Similar News
News March 5, 2026
சற்றுமுன்: நடிகை லதா அதிமுகவில் இணைந்தார்

பிரபல நடிகை லதா, EPS முன்னிலையில் சற்றுமுன் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். எம்ஜிஆர் கட்சித் தொடங்கிய போதே 3-வது பெண் உறுப்பினராக அதிமுகவில் இணைந்தவர். ஜெ., மறைவுக்குப்பின் அதிமுக இரண்டாக உடைந்தபோது, கட்சியில் இருந்து ஒதுங்கி இருந்தார். நல்ல பேச்சாற்றல் கொண்ட அவரை, வரும் தேர்தலில் மாநிலம் முழுவதும் தேர்தல் பரப்புரையை மேற்கொள்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது..
News March 5, 2026
பிஹார் அடுத்த CM யார்? பட்டியல் இதோ

பிஹார் CM பதவியில் இருந்து <<19302375>>நிதிஷ்குமார்<<>> விலகியதை அடுத்து யார் அடுத்த CM என்ற எதிர்பார்ப்பு நிலவிவருகிறது. இந்நிலையில் CM-க்கான உத்தேச பட்டியலில் பாஜகவின் விஜய்குமார் சின்ஹா, சாம்ராட் சௌதரி, அமைச்சர் திலீப் ஜெய்ஸ்வால், அமைச்சர் நித்யானந்த் ராய், MLA சஞ்சீவ் சௌராசியா ஆகியோர் இருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன், நிதிஷ்குமாரின் மகன் நிஷாந்த் துணை முதல்வராக தேர்வு செய்யப்படலாம் எனவும் பேசப்படுகிறது.
News March 5, 2026
CM காட்டிய வைரல் சைகை.. அவரே விளக்கமளித்துள்ளார்

நீண்ட இழுபறிக்கு பின் காங்., கூட்டணி டீலை முடித்துவிட்டு வெளியே வந்த ஸ்டாலின் “All Finish” என்பதைபோல சைகை காட்டினார். இது பட்டிதொட்டி எங்கும் வைரலாக இதற்கு தஞ்சையில் ஒரு விழாவில் பங்கேற்ற அவர் விளக்கமளித்திருக்கிறார். அந்த சைகையை வேண்டுமென்றே செய்யவில்லை என கூறிய அவர், செய்தியாளர்கள் தொகுதி பங்கீடு இறுதியானதா என கேட்டதற்கு தான் அப்படி சைகையால் முடிந்துவிட்டது என கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.


