News June 24, 2024
இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை?

கள்ளக்குறிச்சி விவகாரத்திற்கு பொறுப்பேற்று முதல்வர் ஸ்டாலின் பதவி விலகவேண்டும் என இபிஎஸ் கூறிய நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பொறுப்பேற்று இபிஎஸ் ஏன் அப்போது பதவி விலகவில்லை என CPI மாநில செயலாளர் முத்தரசன் கேள்வி எழுப்பியுள்ளார். இபிஎஸ் அப்போது பதவி விலகியிருந்தால் வரவேற்றிருப்போம் எனக் கூறிய அவர், கள்ளக்குறிச்சி விவகாரத்தில் திமுக அரசு உரிய நடவடிக்கை எடுத்துள்ளது என்றார்.
Similar News
News September 17, 2025
சற்றுமுன்: ஒரே நாளில் விலை ₹2000 குறைந்தது

ஆபரணத் தங்கம் விலை சற்று குறைந்த நிலையில், வெள்ளி விலையும் குறைந்துள்ளது. நேற்று புதிய உச்சத்தை எட்டிய வெள்ளி விலை, இன்று கிராமுக்கு ₹2 குறைந்து ₹142-க்கும், கிலோ வெள்ளி ₹2000 குறைந்து ₹1,42,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இது நகைப்பிரியர்களுக்கு சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. இதனால், வரும் நாள்களிலும் மேலும் விலை குறையுமா என்று எதிர்பார்க்கின்றனர்.
News September 17, 2025
RECIPE: ஹெல்தியான சிறுதானிய பனியாரம்!

குதிரைவாலி, சாமை, இட்லி அரிசி & உளுந்து ஆகியவற்றை 6 மணி நேரம் ஊற வைத்து, இட்லி மாவு பதத்துக்கு அரைக்கவும். கடலைப்பருப்பை பொன்னிறமாக வறுத்து, அதை மாவில் சேர்க்கவும். இத்துடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி & உப்பு சேர்க்கவும். இந்த மாவை மிதமான தீயில் சுட்டு எடுத்தால், ஹெல்தியான குதிரைவாலி- சாமை பனியாரம் ரெடி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். SHARE.
News September 17, 2025
எப்போதும் மக்கள் பக்கம் விஜய்.. தவெகவினர் பதிலடி

அரசியலுக்கு வருவதற்கு முன், மக்களுக்காக என்ன செய்தார் விஜய் என NTK உள்ளிட்ட கட்சிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகின்றன. இதற்கு 2016-ல் ஜல்லிக்கட்டு போராட்டம், 2017-ல் தங்கை அனிதா மரணம், 2018-ல் ஸ்டெர்லைட் படுகொலை, 2024-ல் கள்ளச்சாராய இறப்பு உள்ளிட்ட பல பிரச்னைகளில் மக்கள் பக்கம் நின்றவர். 2026-ல் ‘People’s only hope’ என விஜய்யின் போட்டோவுடன் தவெகவினர் பதிலடி கொடுக்கின்றனர்.