News August 24, 2024
முருகன் மாநாட்டிற்கு CM ஏன் செல்லவில்லை? தமிழிசை

முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் ஒரு உத்திதான் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு CM நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பெயரளவுக்கு மாநாடு நடத்திவிட்டு தங்கள் நிலைப்பாட்டில் அப்படியே தான் இருப்போம் என திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுபான்மையினர் மாநாடு என்றால், அவர் நேரில் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் சாடினார்.
Similar News
News December 3, 2025
இந்தியா வரும் புடின்.. 4 டஜன் ஆட்களை இறக்கிய ரஷ்யா

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருவதை முன்னிட்டு டெல்லியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. NSG கமாண்டோக்கள், ஸ்னைப்பர்ஸ், டிரோன்கள், AI கண்காணிப்பு என 5 அடுக்கு பாதுகாப்பு வளையம் ஏற்படுத்தப்பட உள்ளது. இதுதவிர 40-க்கு மேற்பட்ட ரஷ்ய பாதுகாப்பு அதிகாரிகளும் டெல்லி வந்துள்ளனர். முக்கியமாக, <<18411863>>புடின்<<>> பயன்படுத்தும் அதிநவீன பாதுகாப்பு அம்சங்கள் கொண்ட Aurus Senat சொகுசு காரும் இந்தியா வருகிறது.
News December 3, 2025
புடின் வருகை.. என்னவெல்லாம் நடக்கலாம்?

ரஷ்ய அதிபர் புடின் நாளை இந்தியா வருகிறார். அப்போது ஆயுத உற்பத்தி, அணுசக்தி, டெக் என பல துறைகளில் இருதரப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக, ரஷ்யாவின் அதிநவீன S-500 வான் பாதுகாப்பு அமைப்பு, Su-57 போர் விமானங்களை வாங்க ஒப்பந்தம் போடப்படும் என கூறப்படுகிறது. அதேபோல், வர்த்தகத்தை விரிவுபடுத்துவது தொடர்பாக ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News December 3, 2025
பண மழை கொட்ட போகும் 3 ராசிகள்

வரும் டிச.6-ம் தேதி, புதன் பகவான் விருச்சிக ராசியில் பெயர்ச்சியாவார். இதனால் பின்வரும் 3 ராசியினர் அதிக நன்மைகள் பெறுவர்: *விருச்சிகம்- பணியில் பதவி, சம்பள உயர்வு, தொழிலில் லாபம் கிடைக்கும். *திருமண வாழ்க்கை சிறக்கும். *மகரம்- வருமானம் கணிசமாக அதிகரிக்கும், தொழிலில் லாபம் கூடும். அதிர்ஷ்டத்தின் ஆதரவு உண்டு. *கும்பம்- வேலை, வியாபாரத்தில் முன்னேற்றம் கிடைக்கும். சமூகத்தில் அந்தஸ்து அதிகரிக்கும்.


