News August 24, 2024

முருகன் மாநாட்டிற்கு CM ஏன் செல்லவில்லை? தமிழிசை

image

முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் ஒரு உத்திதான் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு CM நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பெயரளவுக்கு மாநாடு நடத்திவிட்டு தங்கள் நிலைப்பாட்டில் அப்படியே தான் இருப்போம் என திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுபான்மையினர் மாநாடு என்றால், அவர் நேரில் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் சாடினார்.

Similar News

News December 13, 2025

விஜய்யை விசாரிக்க CBI திட்டம்

image

கரூரில் 41 பேர் பலியான வழக்கில் CBI அதிகாரிகள் விஜய்யை விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். ஏற்கெனவே தவெக முக்கிய தலைவர்களான புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, CTR நிர்மல்குமார், மதியழகனிடம் கரூரில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், விஜய்யிடம் விசாரணை நடத்த தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி, கரூருக்கு பதிலாக சென்னையில் வைத்தே விஜய்யிடம் விசாரணை நடத்தப்படவுள்ளதாம்.

News December 13, 2025

2025-ல் அதிக குற்ற சம்பவங்கள் நிகழ்ந்த டாப் 5 நாடுகள்!

image

இந்த நாடுகளில் எங்கு பார்த்தாலும் கொள்ளை கொலை சம்பவங்கள்தான். அரசும், காவல்துறையும் தடுமாறும் சூழலில், கயவர்கள் கைவரிசை காட்டி, மக்களை அச்சுறுத்துகின்றனர். குற்ற சம்பவங்கள், நிதி & சைபர் மோசடிகள் ஆகியவற்றின் அடிப்படையில் 2025-ல் உலகின் டாப் 5 மிக ஆபத்தான நாடுகளின் பட்டியலை ‘நம்பியோ’ என்ற இணையத்தளம் வெளியிட்டுள்ளது. எந்தெந்த நாடுகள் உள்ளன என்பதை அறிய மேலே உள்ள போட்டோவை வலது பக்கமாக Swipe பண்ணுங்க.

News December 13, 2025

காங்கிரஸில் இருந்து விலகுகிறாரா சசி தரூர்?

image

ராகுல் காந்தி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் MP-க்கள் கூட்டத்தை சசி தரூர் புறக்கணித்தது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. அண்மைக் காலமாக சோனியா, கார்கே ஆகியோரின் நிகழ்ச்சிகளை புறக்கணித்து வரும் அவர், PM மோடி, மத்திய அரசின் நிகழ்ச்சிகளில் அதிகம் தலையை காட்டி வருகிறார். இதனால், அவர் கேரள சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்னர் பாஜகவில் இணைவதற்கு அச்சாரமிடுவதாக பேச்சு எழுந்துள்ளது. உங்கள் கருத்து என்ன?

error: Content is protected !!