News August 24, 2024
முருகன் மாநாட்டிற்கு CM ஏன் செல்லவில்லை? தமிழிசை

முத்தமிழ் முருகன் மாநாடு ஓட்டுக்காக நடத்தப்படும் ஒரு உத்திதான் என தமிழிசை செளந்தரராஜன் விமர்சித்துள்ளார். இந்த மாநாட்டிற்கு CM நேரில் செல்லாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், பெயரளவுக்கு மாநாடு நடத்திவிட்டு தங்கள் நிலைப்பாட்டில் அப்படியே தான் இருப்போம் என திமுக அரசு உள்ளதாக குற்றஞ்சாட்டினார். மேலும், சிறுபான்மையினர் மாநாடு என்றால், அவர் நேரில் செல்லாமல் இருந்திருப்பாரா என்றும் சாடினார்.
Similar News
News December 1, 2025
போன்களில் வரும் மாற்றம்.. இனி தொலைந்தாலும் NO Worry!

இந்தியாவில் ஒவ்வொரு புதிய போன்களிலும், ‘Sanchar Saathi’ எனும் டெலிட் செய்ய முடியாத சைபர் செக்யூரிட்டி செயலியை, 90 நாள்களுக்குள் Inbuild செய்ய சொல்லி, ஸ்மார்ட்போன் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள போன்களில், சாஃப்ட்வேர் அப்டேட் மூலம் இதை சேர்க்கவும் உத்தரவிட்டுள்ளது. இந்த அரசு செயலியின் உதவியால், இதுவரை காணாமல் போன 7 லட்சம் போன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
News December 1, 2025
BREAKING: வரலாறு காணாத சரிவு.. மிகப்பெரிய தாக்கம்

மாதத்தின் முதல் வர்த்தக நாளான இன்று, US டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, வரலாற்றில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் விலை உயர்வு உள்ளிட்ட காரணிகளால், ரூபாயின் மதிப்பு 34 பைசாக்கள் சரிந்து ₹89.79 ஆக உள்ளது. அதேபோல், மும்பை பங்குச்சந்தை 65 புள்ளிகள் சரிந்து 85,642 புள்ளிகளுடனும், தேசிய பங்குச்சந்தை 27 புள்ளிகள் சரிந்து 26,175 புள்ளிகளுடனும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.
News December 1, 2025
BREAKING: சென்னை, திருவள்ளூருக்கு ரெட் அலர்ட்!

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் 10 மணிநேரத்திற்கும் மேலாக கனமழை பெய்து வருகிறது. இதனிடையே, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களுக்கு இன்று(டிச.1) அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை, ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் பண்ணுங்க.


