News May 15, 2024
வேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடியது ஏன்?

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய அவர், கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காப்பதாக உணர்ச்சிவயப்பட்டு பேசினார். கங்கை தன்னை வலுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News August 8, 2025
கர்ப்பிணி என்று தெரிந்தும் இறக்கம் இல்லை: ராதிகா

கர்ப்பமாக இருந்த போது ஷூட்டிங்கில் எதிர்கொண்ட வலிகளை நடிகை ராதிகா ஆப்தே பகிர்ந்துள்ளார். ஒரு பாலிவுட் படத்தில் நடித்த போது தான் கர்ப்பமாக இருப்பதை தெரிந்து கொண்ட அப்படத்தின் தயாரிப்பாளர், மிகவும் இறுக்கமான ஆடைகளை அணிய சொல்லி கட்டாயப்படுத்தியதாகவும், டாக்டர்களை பார்க்கக்கூட அனுமதிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளாா். மேலும், அந்த வலியிலும் தன்னை படப்பிடிப்பில் ஈடுபடுத்தியதாகவும் கூறியுள்ளார்.
News August 8, 2025
இன்றைய நல்ல நேரம்

▶ஆகஸ்ட் 8 – ஆடி 23 ▶கிழமை: வெள்ளி ▶நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 12:15 AM – 1:15 AM & 6:30 PM – 7:30 PM ▶ராகு காலம்: 10:30 AM – 12:00 PM ▶எமகண்டம்: 3:00 PM – 4:30 PM ▶குளிகை: 7:30 AM – 9:00 AM ▶திதி: சதுர்தசி ▶சூலம்: மேற்கு ▶பரிகாரம்: வெல்லம் ▶பிறை: வளர்பிறை.
News August 8, 2025
ஹாஸ்பிடலில் இந்திய அணி ஆல்ரவுண்டர்

இந்திய அணி வீரர் நிதிஷ்குமாருக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான ஹாஸ்பிடலில் இருக்கும் புகைப்படத்தை நிதிஷ் தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், அவர் சீக்கிரம் குணமடைய வாழ்த்தி வருகின்றனர். இங்கிலாந்துக்கு எதிரான 4வது டெஸ்டிற்கு முன்பு ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போது அவருக்கு முழங்காலில் அடிபட்டது. அதனால், தொடரை விட்டு வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டது.