News May 15, 2024
வேட்பு மனு தாக்கலுக்கு முன் கங்கையில் நீராடியது ஏன்?

மக்களவைத் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு முன்னதாக, பிரதமர் மோடி கங்கையில் நீராடியது கவனம் ஈர்த்தது. இது குறித்த பேசிய அவர், தான் கங்கை மாதாவின் தத்துப்பிள்ளை என்றார். தன்னுடைய தாயாரின் மறைவுக்குப் பின்னர், கங்கை மாதா தனக்கு நெருக்கமாக இருப்பதாக கூறிய அவர், கங்கை ஆறு ஒரு தாயைப் போல அனைவரையும் காப்பதாக உணர்ச்சிவயப்பட்டு பேசினார். கங்கை தன்னை வலுப்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News April 5, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (ஏப்ரல் 5) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News April 5, 2026
காதலித்து திருமணம் செய்ய மறுத்தால் குற்றமல்ல: ஐகோர்ட்

காதலித்து திருமணம் செய்து கொள்வதாக கூறி மோசடி செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் தெலங்கானா ஐகோர்ட் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அதன்படி, காதலித்த பிறகு திருமணத்தை மறுப்பது அனைத்து சூழல்களிலும் குற்றம் (அ) மோசடி எனும் பிரிவின் கீழ் வராது என நீதிபதி தெரிவித்துள்ளார். அது வெறும் வாக்குறுதி மீறல் மட்டுமே என்றும் கோர்ட் தெளிவுபடுத்தியுள்ளது. நீங்க என்ன நினைக்கிறீங்க?
News April 5, 2026
கண்ணா நீ தூங்கடா..!

தூக்கம் – இந்த ஒற்றை வார்த்தை தான் நம்மை இயக்குகிறது. தூக்கமே வரலப்பா என்று அவதிப்படுவோரும், எப்போ பாத்தாலும் தூக்கம் தூக்கமா வருது என்று புலம்புவோரும் அதிகம். தூக்கம் என்பது உங்களுக்குத் தேவைப்படும் ஓர் ஓய்வு. அந்த ஓய்வு இன்றி உங்களால் வாழ முடியாது. உங்கள் உடலைவிட, மனதுக்கு நிச்சயமாக ஓய்வு தேவை. உடலுக்கும் உள்ளத்துக்கும் ஓய்வு கிடைக்கவே, இயற்கை தூக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதை தவிர்க்கலாமா?


