News April 2, 2024
எம்.பி தேர்தலில் ஏன் போட்டியிடவில்லை?

அடுத்த 2 வருடமும் தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்ற காரணத்தால் மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை என அன்புமணி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரத்தில் பேசிய அவர், “எங்களின் முதல் இலக்கு 2026 சட்டப்பேரவை தேர்தல். திமுக, அதிமுக இல்லாத கூட்டணியை அமைப்பதே நோக்கமாக இருக்கிறது. மக்களவைத் தேர்தலில் வென்று டெல்லிக்கு சென்றால் அதை செய்ய முடியாது. எனவே, என் முழு கவனமும் தமிழகத்தின் மீதுதான் உள்ளது” என்றார்.
Similar News
News January 18, 2026
சவுதி அரேபியாவில் அரிய சிறுத்தை மம்மிகள்

வடக்கு சவுதி அரேபியாவில் உள்ள குகைகளில் அரிய சிறுத்தை எச்சங்களை (மம்மிகள்) கண்டுபிடித்துள்ளனர். அவை 130 – 1800 ஆண்டுகள் பழமையானவை என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். அரார் நகருக்கு அருகே 7 சிறுத்தை மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டன, அவற்றுடன் 54 சிறுத்தை எலும்புகளும் இருந்தன. பாலைவனங்கள், பனிப்பாறைகள் மற்றும் சதுப்பு நிலங்களில் மம்மிகேஷன் இயற்கையாகவே நிகழ்கிறது என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
News January 18, 2026
RCB ஆல்-ரவுண்டர் U19 WC-ல் அசத்தல்

U19 WC-ல் வங்கதேசத்துக்கு எதிராக இந்திய அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு வழிவகுத்த விஹான் மல்ஹோத்ராவுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. இளம் ஆல்-ரவுண்டரான விஹான், IPL 2026 ஏலத்தில் RCB அணியால் ₹30 லட்சத்திற்கு வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
News January 18, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 584 ▶குறள்: வினைசெய்வார் தஞ்சுற்றம் வேண்டாதா ரென்றாங் கனைவரையும் ஆராய்வ தொற்று ▶பொருள்: தம்முடைய தொழிலைச் செய்கின்றவர், தம் சுற்றத்தார், தம் பகைவர் என்றுக்கூறப்படும் எல்லாரையும் ஆராய்வதே ஒற்றரின் தொழிலாகும்.


