News January 2, 2025

ரஜினியை சந்தித்தது ஏன்? ஓபிஎஸ் விளக்கம்

image

ஓபிஎஸ் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் பின்புலத்தில், 2026 சட்டமன்றத் தேர்தல் கணக்கு, பாஜக கூட்டணி உள்ளிட்ட அரசியல் காரணங்கள் உள்ளதாகக் கூறப்பட்டது. இந்நிலையில், சந்திப்பு குறித்து விளக்கமளித்த ஓபிஎஸ், மரியாதை நிமித்தமாகவே ரஜினியை சந்தித்ததாகக் கூறினார். அரசியல் ரீதியாக எந்த விவாதமும் தங்களுக்கு இல்லை எனவும், அப்படி எந்த பேச்சுவார்த்தையும் நடக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

Similar News

News December 31, 2025

புத்தாண்டில் விஜய் ரசிகர்களுக்கு ட்ரீட்!

image

விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ‘ஜனநாயகன்’ டிரெய்லர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதுபற்றிய அறிவிப்பை ஜன.1-ம் தேதி படக்குழு அறிவிக்கவுள்ளதாகவும், ஜன.2 மாலை டிரெய்லர் ரிலீசாகும் என்றும் கூறப்படுகிறது. அதோடு ஜன.4-ல் ஆடியோ லாஞ்ச் நிகழ்வு டிவியில் ஒளிபரப்பு ஆவதால் ரசிகர்கள் இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். விஜய்யின் One Last Dance-ஐ பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்?

News December 31, 2025

டிஜிபியாக டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு

image

தமிழகம் முழுக்க 70 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஏடிஜிபி ஆக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் பதவி உயர்வு பெற்று, ஆயுதப்படை டிஜிபி ஆக நியமிக்கப்பட்டுள்ளார். சந்தீப் மிட்டல் சைபர் கிரைம் டிஜிபி ஆகவும், பால நாகதேவி குற்றப்பிரிவு டிஜிபி ஆகவும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சட்டம் ஒழுங்கு ஏடிஜிபியாக மகேஷ் தயாள் பொறுப்பேற்கவுள்ளார்.

News December 31, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.

error: Content is protected !!