News August 11, 2025
பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? EPS புதிய விளக்கம்

நாங்கள் யாருடன் வேண்டுமானாலும் கூட்டணி வைப்போம், ஸ்டாலினுக்கு ஏன் பயம் வருகிறது என EPS கேள்வி எழுப்பியுள்ளார். தளியில் பேசிய அவர், TN மக்களுக்கு தீங்கு செய்யும் திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றவே ஒத்த கருத்துடைய இரு கட்சிகள்(ADMK – BJP) கூட்டணி அமைத்துள்ளது என்றார். மேலும், மத்திய அரசுடன் இணக்கமாக இருந்தால் தான் மாநிலத்திற்கு தேவையான நல்ல திட்டங்களை எளிமையாக நிறைவேற்ற முடியும் எனவும் கூறினார்.
Similar News
News August 12, 2025
தொடர் விடுமுறை: சிறப்பு பஸ்களை அறிவித்த TNSTC

சுதந்திர தினம், வார இறுதி நாள்களையொட்டி சிறப்பு பஸ்களை அரசு அறிவித்துள்ளது. வரும் 13, 14 மற்றும் 15-ம் தேதிகளில் சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து தி.மலை, திருச்சி, மதுரை, நெல்லை, குமரி, சேலம், கோவை உள்ளிட்ட நகரங்களுக்கு 1,320 பஸ்கள் இயக்கப்படவுள்ளன. கோயம்பேட்டில் இருந்து நாகை, ஓசூருக்கு 190 பஸ்களும், அதேபோல் 17-ம் தேதி சென்னைக்கு திரும்ப 715 பஸ்களும் இயக்கப்படவுள்ளன. <
News August 12, 2025
மொபைலை கொஞ்சம் கீழ வையுங்க!

நாள் முழுவதும் டி.வி, லேப்டாப், மொபைல் போன்றவற்றிலேயே பொழுதை கழிப்பவர்களுக்கு இரவில் தூக்கம் வருவது பெரும் சவாலானது. உடல் அசதியாக இருந்தாலும் கண் எரிச்சல் இருப்பதால் எளிதில் தூக்கம் வருவதில்லை. அதனால், உறங்குவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே மொபைல், டி.வி பயன்பாட்டை நிறுத்துங்கள். உங்களுக்குப் பிடித்த புத்தகங்களை வாசியுங்கள். நிம்மதியான உறக்கத்தை பெறலாம். தூக்கம் வர வேறு ஏதேனும் யோசனை இருக்கா?
News August 12, 2025
சைபர் கிரிமினல்களுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

சைபர் கிரிமினல்களின் SIM கார்டுகளை உடனே முடக்க SP-களுக்கு அதிகாரமளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மேலும், சந்தேகத்துக்கு உரியவர்களின் லொக்கேஷன்கள், வங்கி & தொலைபேசி விவரங்களை உடனடியாக அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கு அனுப்பவும், சைபர் குற்றங்கள் தொடர்பாக நாடு முழுவதும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்படும். இத்திட்டம், முதல்கட்டமாக தெலங்கானாவில் அமல்படுத்தப்படவுள்ளது.