News October 27, 2024
அரசியலுக்கு வந்தது ஏன்? பதில் சொன்ன விஜய்

நடித்தோமா, பணம் சம்பாதித்தோமானு இருந்திடலாம் என்று தான் முதலில் தோன்றியது என்று தொடங்கிய விஜய், “ஒரு அளவுக்கு மேல் பணம் சேர்த்து என்ன செய்யப் போகிறோம் என ஒரு கட்டத்தில் தோன்றியது. நம்மள இந்த உயரத்தில் வைத்திருக்கும், வாழவைக்கும் இந்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டாமா என்ற கேள்வி மனதில் எழுந்தது. இதை தீவிரமாக யோசித்ததன் விளைவாக மனதில் தோன்றிய எண்ணம் தான் ‘அரசியல்’, மக்களுக்கான அரசியல்!” என்றார்.
Similar News
News January 20, 2026
அவையில் கவர்னர் அவமதிக்கப்பட்டாரா?

பேரவையில் கவர்னர் ரவியின் மைக்கை பலமுறை ஆப் செய்து அவமதித்ததாக மக்கள் பவன் கூறியுள்ளது. மக்களை தவறாக வழிநடத்தும் தகவல்கள் TN அரசு தயாரித்த அறிக்கையில் உள்ளதாக கூறிய மக்கள் பவன், TN அரசு ₹12 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்த்துள்ளதாக உண்மைக்கு மாறான தகவல் இடம்பெற்றுள்ளது எனவும் குற்றஞ்சாட்டியுள்ளது. மேலும், முதலீடுகளில் TN 4-வதில் இருந்து 6-வது இடத்துக்கு பின்தங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
News January 20, 2026
மக்கள் நாயகன் காலமானார்

இயற்கை ஆர்வலர் ராதேஷ்யாம் கோயங்கா(84) உடல்நலக்குறைவால் காலமானார். அசாமை சேர்ந்த இவருக்கு மரங்களின் நண்பன் என்ற பெயரும் உண்டு. திப்ருகர், ஜோதிநகர் உள்ளிட்ட பகுதிகளில் மரக்கன்றுகளை நட்டு அவற்றை பராமரித்து பசுமை புரட்சி செய்தார். தொழில் பொறுப்புகளை மகனிடம் ஒப்படைத்துவிட்டு,’கிரீன் திப்ருகர்’ உருவாக்கத்திற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தார். இவரது மறைவால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
News January 20, 2026
அதிமுக வெளிநடப்பு செய்தது

TN சட்டப்பேரவையில் இருந்து அதிமுகவினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தமிழகத்தில் சீர்குலைந்துள்ள சட்டம் ஒழுங்கு நிலை குறித்து விவாதிக்க சபாநாயகர் அனுமதி வழங்காததாக கூறி அதிமுக MLA-க்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனையடுத்து வெளியேறிய அவர்கள், மாநில அரசே ராஜினாமா செய் எனவும் சட்டம்-ஒழுங்கு எங்கே போச்சு எனவும் கோஷமிட்டனர். இதற்கு முன்னதாக கவர்னர் வெளிநடப்பு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


