News April 1, 2024

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்?

image

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு இயக்குநர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷிட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் விலகி விட்டார். மற்ற 3 பாக அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் அரண்மனை 4 படம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Similar News

News August 13, 2025

சேலம் மாநகர இரவு ரோந்து போலீசார் விவரம்

image

சேலம் மாநகரில் இன்று (ஆகஸ்ட் 13) இரவு ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரின் விவரங்களை, மாநகர காவல்துறை வெளியிட்டுள்ளது. சேலம் சரகம், அன்னதானப்பட்டி, கொண்டலாம்பட்டி, அம்மாபேட்டை, ஆகிய பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடும் போலீசாரை புகைப்படத்தில் உள்ள தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் மற்றும் தகவல்களை தெரிவிக்கலாம். உதவிக்கு மாநகர கட்டுப்பாட்டு எண்: 0427-2273100 அழைக்கலாம்.

News August 13, 2025

சிக்கித் தவிக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்?

image

நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜின் திருமண சர்ச்சை இன்னும் ஓயவில்லை. திருமண செய்தி வெளியான அடுத்த நாளே, தான் கர்ப்பம் என 2-வது மனைவி ஜாய் கிரிசில்டா கூறினார். ஆனால், <<17386595>>முதல் மனைவி ஷ்ருதியுடன்<<>> நேற்று நிகழ்ச்சியில் ரங்கராஜ் பங்கேற்றது பல கேள்விகளை எழுப்பியது. இதனிடையே, மெடிக்கல் செக் அப் படங்களை பதிவிட்ட கிரிசில்டா, குழந்தைக்கு ராஹா ரங்கராஜ் என பெயர் வைத்துள்ளாராம். ஒரே குழப்பம்!

News August 13, 2025

மோடி ஜி.. ரோடு சரியில்ல… லெட்டர் எழுதிய சுட்டி!

image

பெங்களூருவின் டிராபிக்கால் மக்கள் கடும் சிரமத்தை அனுபவித்து வருகின்றனர். இதுகுறித்து 5 வயது சிறுமி ஒருவர், PM மோடிக்கு லெட்டர் எழுதி இருக்கிறார். அதில், ‘மோடி ஜி, ஓவர் டிராபிக்கால் ஸ்கூலுக்கும் ஆபிஸுக்கும் லேட்டாக போகிறோம், ரோடு மோசமாக இருக்கு. ஹெல்ப் பண்ணுங்க’ என எழுதியுள்ளார். இந்த லெட்டர் வைரலாக, PM மோடி இதற்கு என்ன செய்ய போகிறார்? என நெட்டிசன்கள் வினவி வருகின்றனர்.

error: Content is protected !!