News April 1, 2024

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியது ஏன்?

image

அரண்மனை 4 படத்திலிருந்து விஜய் சேதுபதி விலகியதற்கு இயக்குநர் சுந்தர் சி விளக்கமளித்துள்ளார். அவர் கூறுகையில், “அரண்மனை 4 படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக இருந்தது. ஆனால் கால்ஷிட் பிரச்சினையால் அவரால் நடிக்க முடியவில்லை. இதனால் விலகி விட்டார். மற்ற 3 பாக அரண்மனை படங்களுடன் ஒப்பிடுகையில் அரண்மனை 4 படம் மாறுபட்ட கோணத்தில் இருக்கும்” என்று கூறியுள்ளார்.

Similar News

News January 19, 2026

‘தெறி’ ரி-ரீலீஸ் மீண்டும் ஒத்திவைப்பா?

image

மோகன்.ஜி இயக்கியுள்ள ‘திரெளபதி 2’ ஜன.23-ல் ரிலீசாகிறது. அன்று ‘தெறி’ ரி-ரீலீஸ் அறிவிக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வரும் இயக்குநர்கள், புதிய தயாரிப்பாளர்களின் நலன்கருதி கலைப்புலி தாணு இம்முடிவை மாற்ற வேண்டும் என மோகன்.ஜி கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட தாணு ‘தெறி’ ரீ-ரிலீஸ் வெளியீட்டு முடிவு நாளை அறிவிக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதனால், தெறி ரீ-ரிலீஸ் மீண்டும் தள்ளிப்போக வாய்ப்புள்ளது.

News January 19, 2026

ஆ.ராசாவுக்கு எதிராக விசிக.. சிக்கலில் கூட்டணி

image

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திருமாவளவனை ‘சாதிக் கட்சி தலைவர்’ என ஆ.ராசா பேசியது கூட்டணிக்குள் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரம்பலூரில் விசிகவினர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். அப்போது, ‘RSS கைக்கூலி ஆண்டிமுத்து ராசா மீது திமுக தலைமை நடவடிக்கை எடுக்க வேண்டும், 2ஜி ஊழல்வாதி ஆண்டிமுத்து ராசாவை கண்டிக்கிறோம்’ என அவர்கள் கோஷமிட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News January 19, 2026

பராசக்தி படம் பார்த்தபின் சீமான் வேண்டுகோள்!

image

பராசக்தி படம் தான் நம் மொழிப்போராட்ட வரலாறு என ஒப்பிட்டு பேசாதீர்கள் என சீமான் வேண்டுகோள் விடுத்துள்ளார். உண்மையான மொழி போராட்டத்தை எடுத்தால், அப்படம் ரிலீஸே ஆகாது என்றும், அந்த ஜன நாயகம் நம் நாட்டில் இல்லை. ஜன நாயகன் படும்பாடே அதற்கு உதாரணம் எனவும் விமர்சித்துள்ளார். மேலும், சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வாவின் பங்களிப்பும், GV பிரகாஷின் பின்னணி இசையும் நேர்த்தியாக இருந்ததாக பாராட்டியுள்ளார்.

error: Content is protected !!