News March 24, 2024

தேனி தொகுதியை டிடிவி தினகரன் தேர்வு செய்தது ஏன்?

image

ஓபிஎஸ்சும், அவரின் மகனும் கேட்டுக் கொண்டதாலேயே தேனி தொகுதியில் தாம் போட்டியிடுவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், “மக்கள் செல்வன் என எனக்கு தேனி மக்கள்தான் பெயர் வைத்தனர். கடந்த மாதம் நான் தேனி சென்றபோது, அங்கு போட்டியிடும்படி ஓபிஎஸ்சும் அவரின் மகனும் கேட்டனர். அத்தொகுதி மக்களும் கேட்டனர். இதனால் தேனி தொகுதியில் போட்டியிட முடிவு செய்தேன்” என்றார்.

Similar News

News November 4, 2025

BREAKING: நடிகை த்ரிஷா வீட்டில் குவிந்த போலீஸ்… பதற்றம்

image

சென்னையில் நடிகை த்ரிஷா வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நிபுணர்கள், மோப்ப நாய் உதவியுடன் போலீசார் அங்கு சோதனை மேற்கொண்டனர். இதில், வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளி எனத் தெரியவந்தது. இதேபோல், நடிகர் விஷால், இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோரின் வீடுகளுக்கும் மர்ம நபர் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளார்.

News November 4, 2025

BREAKING: பதவியை ராஜினாமா செய்தார் மனோஜ் பாண்டியன்

image

இன்று காலையில் திமுகவில் இணைந்த OPS ஆதரவாளர் மனோஜ் பாண்டியன், தனது MLA பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து, தனது ராஜினாமா கடிதத்தை அவர் வழங்கினார். 2021-ல் அதிமுக சார்பில் ஆலங்குளம் தொகுதியில் போட்டியிட்டு மனோஜ் பாண்டியன் வெற்றி பெற்றிருந்தார்.

News November 4, 2025

கனமழை வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

image

தமிழகத்தில் 3 நாள்களுக்கு <<18195152>>கனமழைக்கான மஞ்சள் அலர்ட்<<>> கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது, திருவாரூர் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை, சென்னை, திருவள்ளூர், திருவாரூர், கோவை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் முடிந்து வீடு திரும்புவோர் கவனமாக இருங்க!

error: Content is protected !!