News January 8, 2025

ஆளுநர் ஏன் வெளியேறினார்? சீமான் சொன்ன பதில்

image

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கான காரணத்தை சீமான் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் விற்பனை என ஆட்சியில் பல அவலங்கள் நடந்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்த பொய்யை பேச வேண்டுமா என நினைத்து, ஆளுநர் வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசு உரையை படித்திருந்தால், அவர் DMKவில் சேர்ந்து விடலாம் என்றுதான் தாங்கள் நினைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News September 14, 2025

BREAKING: திமுகவில் நடிகருக்கு முக்கிய பொறுப்பு

image

திமுகவின் கலை, இலக்கிய பகுத்தறிவு பேரவை துணை தலைவராக நடிகர் போஸ் வெங்கட் நியமிக்கப்பட்டுள்ளார். அந்த பொறுப்பில் இருந்து MP தமிழச்சி தங்கபாண்டியன் கல்வியாளர் அணி செயலாளர் பொறுப்புக்கு மாற்றப்பட்டதால் போஸ் வெங்கட் இப்பொறுப்புக்கு வந்துள்ளார். இதற்கு CM ஸ்டாலின், DCM உதயநிதி உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்துள்ள போஸ் வெங்கட், வரும் தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் வெல்வது உறுதி எனவும் கூறியுள்ளார்.

News September 14, 2025

பேரழகான டாப் 5 இந்திய ரயில் நிலையங்கள்

image

‘அழகு’ என்பது மனிதரில் மட்டுமல்ல, நாம் காணும் அனைத்திலும் உள்ளது. அதிலும் பயணம் என்பது அனுபவம் கலந்த அழகு. குறிப்பாக, ரயில் பயணம், நமது மனதை அதிகமாகவே அழகாக்கிறது. அந்த வகையில், ரயில் நிலையங்களும் அழகாக இருந்தால் பயணம் பேரழகாகிறது. இந்நிலையில், இந்தியாவில் உள்ள டாப் 5 அழகான ரயில் நிலையங்களை மேலே Swipe செய்து பாருங்கள். அதை பார்த்ததும் உங்களுக்கு தோன்றும் கவிதையை கமெண்ட்டில் எழுதுங்கள்.

News September 14, 2025

பசுவை விலங்காக கூட கருதுவதில்லை: மோடி

image

நாட்டில் விலங்குகள் நல ஆர்வலர்கள் அதிகமாக இருக்கும் நிலையில், அவர்களில் பெரும்பாலானோர் பசுவை விலங்காக கூட கருதுவதில்லை என PM மோடி கூறியுள்ளார். இதனை, விலங்குகள் மீதான ஆர்வலர்களின் தேர்ந்தெடுக்கப்பட்ட அக்கறை என்றும் PM குறிப்பிட்டார். நாடு முழுவதும் தெருநாய்கள் விவகாரம் விவாதமாகியுள்ள நிலையில், மோடியின் இந்த பேச்சு தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

error: Content is protected !!