News January 8, 2025
ஆளுநர் ஏன் வெளியேறினார்? சீமான் சொன்ன பதில்

சட்டசபையில் இருந்து ஆளுநர் வெளியேறியதற்கான காரணத்தை சீமான் கூறியுள்ளார். சட்டம் ஒழுங்கு சீர்கேடு, போதைப் பொருள் விற்பனை என ஆட்சியில் பல அவலங்கள் நடந்து வரும் நிலையில், ஆட்சியாளர்கள் எழுதிக் கொடுத்த பொய்யை பேச வேண்டுமா என நினைத்து, ஆளுநர் வெளியேறிவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். ஒருவேளை அரசு உரையை படித்திருந்தால், அவர் DMKவில் சேர்ந்து விடலாம் என்றுதான் தாங்கள் நினைப்போம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News January 15, 2026
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: ஒற்றாடல் ▶குறள் எண்: 581 ▶குறள்: ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும் தெற்றென்க மன்னவன் கண். ▶பொருள்: நேர்மையும் திறனும் கொண்ட ஒற்றரும், நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் கண்களாகக் கருதப்பட வேண்டும்.
News January 15, 2026
‘ஜெயிலர் 2’-ல் ரஜினிக்கு வில்லன் விஜய் சேதுபதியா?

இனி தன்னை ஆச்சரியப்படுத்தும் கதைகளில் மட்டும் தான் வில்லனாக நடிப்பேன் என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். வழக்கமான வில்லன் கதாபாத்திரங்களில் நடிக்க சொல்லி பலர் தன்னை அணுகுவதாகவும், ஆனால், ஒரு வில்லனை ஹீரோவாக புரொமோட் செய்வதில் தனக்கு விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரஜினியை பிடிக்கும் என்பதால் ‘ஜெய்லர் 2’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
News January 15, 2026
ஈரானின் எச்சரிக்கையால் மத்திய கிழக்கில் பதற்றம்

மத்திய கிழக்கு பகுதியில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அமெரிக்கா தனது நாட்டின் மீது தாக்குதல் நடத்தினால், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என்று ஈரான் எச்சரித்துள்ளது. இதனால், அமெரிக்கா தனது ராணுவப் படைகளை கத்தாரில் உள்ள அல் உதெய்த் விமானத் தளத்திலிருந்து திரும்ப பெற்றுள்ளது. அல் உதெய்த், மத்திய கிழக்கில் அமெரிக்காவின் மிகப்பெரிய ராணுவத் தளமாகும்.


