News July 24, 2024
ஏஞ்சல் வரியை அரசு நீங்கியது ஏன்?

ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வந்த வரிதான் ஏஞ்சல் வரி. அதாவது, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அதன் சந்தை மதிப்பை விட அதிகமான முதலீடுகளை ஈர்த்தால், ஏஞ்சல் வரி விதிக்கப்பட்டது. முதலீட்டாளர்களிடம் இருந்து பங்கு விற்பனை மூலம் நிதி பெறும் நிறுவனங்கள் இந்த வரியை செலுத்த வேண்டியிருந்தது. தற்போதைய பட்ஜெட்டில் இந்த வரி நீக்கப்பட்டுள்ளது. இதனால், முதலீடுகள் அதிகரிக்கும் என அரசு கருதுகிறது.
Similar News
News March 5, 2026
ஈரானுக்காக ரஷ்யா- சீனா வரவில்லை.. இதான் காரணமா?

இஸ்ரேலும், USA உடனான போரில் ஈரானின் கூட்டாளிகளான ரஷ்யாவும், சீனாவும் கண்டனம் தெரிவித்ததோடு சரி, ராணுவ ரீதியாக உதவ முன்வரவில்லை. ஏற்கெனவே உக்ரைனுடன் போர்புரிந்து வருகிறது ரஷ்யா. அதனால் மற்றொரு போர் வேண்டாம் என அந்நாடு ஒதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது. அத்துடன் சீனா USA-வை பகைத்துக்கொள்ள விரும்பவில்லை, மற்ற நாடுகளின் விவகாரங்களில் தலையிடுவதில்லை என்ற கொள்கையில் தீவிரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
News March 5, 2026
வான்கடேவில் தோனி-சாக்ஷி தம்பதி!

விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தியா – இங்கிலாந்து இடையேயான அரையிறுதி போட்டியை Ex. கேப்டன் தோனி தனது மனைவி சாக்ஷியுடன் கண்டுகளிக்கும் வீடியோ SM-ல் வைரலாகி வருகிறது. அர்ஜூன் டெண்டுல்கர் திருமணத்தில் இருவரும் பங்கேற்ற நிலையில் ஜோடியாக வான்கடேவுக்கு சென்றுள்ளனர். அதே போன்று ரோகித் சர்மா உள்ளிட்ட பிரபலங்களும் போட்டியை நேரில் கண்டு ரசித்து வருகின்றனர்.
News March 5, 2026
நாளை பள்ளிகளுக்கு விடுமுறை.. கலெக்டர் அறிவிப்பு

சனிப் பெயர்ச்சியை முன்னிட்டு, திருநள்ளாறு கோயில் விசேஷம் காரணமாக காரைக்கால் மாவட்டத்திற்கு நாளை(மார்ச் 6) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பொருந்தாது. இதேபோல், திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 9-ல் புதுக்கோட்டை, பகவதியம்மன் கோயில் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 10-ல் குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாகும். SHARE IT


