News April 28, 2024
மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்தது ஏன்?

தமிழகத்திற்கு வழங்கப்படும் மண்ணெண்ணெய் அளவை மத்திய அரசு குறைத்துவிட்டதாக மாநில அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதுகுறித்து மத்திய பொது விநியோக திட்ட அலுவலக தரப்பில், தமிழகத்தில் 2.24 கோடி ரேஷன் கார்டுதாரர்கள் உள்ளதாகவும், அதேசமயம் கேஸ் சிலிண்டர் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 2.40 கோடி உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதனால்தான், மண்ணெண்ணெய் ஒதுக்கீடு குறைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News August 26, 2025
பிரபல நடிகர் விவாகரத்து.. ட்விஸ்ட் கொடுத்த இயக்குநர்!

பிரபல நடிகர் கோவிந்தா- சுனிதா தம்பதியர், விவாகரத்து <<17487419>>செய்வதாக <<>>வெளியான செய்திகளில் உண்மையில்லை என கோவிந்தாவின் நெருங்கிய நண்பரும், இயக்குநருமான பஹ்லாஜ் நிஹலானி தெரிவித்துள்ளார். அவர்கள் இருவருக்குள் விவாகரத்து பெற தூண்டும் எந்த ஒரு பிரச்னையையும் தான் பார்க்கவில்லை என அவர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். ஆனால், விவாகரத்து குறித்து இன்னும் கோவிந்தாவும், சுனிதாவும் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை.
News August 26, 2025
RCB அணிக்கு திரும்ப ரெடி : ABD சூசகம்

RCB அணியின் முன்னாள் லெஜண்டரி வீரர் ஏபி டிவில்லியர்ஸ். சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், எதிர்காலத்தில் தன்னை RCB அணியின் பயிற்சியாளர் அல்லது ஆலோசகர் பணிக்கு அணுகினால் அதனை ஏற்றுக்கொள்வேன் என தெரிவித்துள்ளார். தனது இதயம் எப்போதும் RCB அணியோடு இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளார். இப்பேட்டியின் மூலம் வரும் IPL-ல் RCB அணியில் ABD ஏதாவதொரு பொறுப்பு வகிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News August 26, 2025
காலை உணவு திட்டம் சூப்பரான சமூக முதலீடு: CM ஸ்டாலின்

மாணவர்களுக்கு கல்வி வழங்குவது மட்டுமில்ல, பசியையும் பள்ளிகள் போக்க வேண்டுமென CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். மயிலாப்பூரில் காலை உணவு திட்ட விரிவாக்கத்தை துவக்கிய பின் பேசிய அவர், இத்திட்டத்தை தானே நேரடியாக கண்காணித்து வருவதாகவும், இந்த விரிவாக்கம் மூலம் 3.06 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்றும் தெரிவித்தார். இத்திட்டம் செலவு கிடையாது, சூப்பரான சமூக முதலீடு என பெருமிதத்துடன் கூறினார்.