News August 24, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை? ராகுல் பேச்சு

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். உ.பியில் பேசிய அவர், போதுமான ஆற்றல், திறமை இருந்தும், இந்தியாவில் 90% மக்கள் அரசு அமைப்புகளில் அங்கமாக இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை உருவாக்கத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்ற அவர், இறுதிவரை போராடி காங்கிரஸ் கட்சி அதனை நிறைவேற்றும் என உறுதியளித்தார்.
Similar News
News November 15, 2025
மிக கனமழை வெளுக்கப் போகுது… வந்தது அலர்ட்

தமிழகத்திற்கு மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இரவு 7 மணி வரை நாகை, குமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, விருதுநகர், திருப்பூர், கடலூர், செங்கை, மயிலாடுதுறை, திருவாரூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. ஆகையால், அலுவலகம் சென்றவர்கள் கவனமுடன் வீடு திரும்புங்கள். உங்க ஊரில் இப்போ மழையா?
News November 15, 2025
குட்டி சிம்ரன் பிரியா வாரியர் PHOTOS

பிரியா வாரியர், தனது அறிமுக படத்திலேயே கண்ணடித்து, ரசிகர்களை கவர்ந்தார். அப்போது, SM-யில், அவர்தான் டிரெண்டில் இருந்தார். இதையடுத்து, ‘குட் பேட் அக்லி’ படத்தில் ‘சுல்தானா’ பாடலுக்கு நடனமாடி அசத்தினார். இதற்கு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பு கிடைத்தது. தற்போது வியட்நாம் சுற்றுலா போட்டோஸை, இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது. உங்களுக்கும் பிடிச்சிருந்தா லைக் போடுங்க.
News November 15, 2025
தந்தைக்காக கிட்னி தானம் செய்த ரோஹினி

அரசியலில் இருந்து விலகுவதாக லாலுவின் மகள் ரோஹினி ஆச்சார்யா <<18296569>>அறிவித்துள்ளது<<>> RJD கட்சிக்குள் புயலைக் கிளப்பியுள்ளது. லாலு கவலைக்கிடமாக இருந்த போது, அவருக்கு தன் ஒரு கிட்னியை தானமாக கொடுத்தவர் ரோஹினி. சகோதரர் தேஜஸ்விக்கு நெருக்கமாக இருக்கும் சஞ்சய் யாதவ், ரமீஸ் ஆகியோர், அவரை தவறாக வழிநடத்துவதாக ரோஹினி புகாரளித்தும், அதை தலைமை கண்டுகொள்ளாததால் மனமுடைந்து வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.


