News August 24, 2024
சாதிவாரி கணக்கெடுப்பு ஏன் தேவை? ராகுல் பேச்சு

இந்தியாவில் சாதிவாரி கணக்கெடுப்பு காலத்தின் கட்டாயம் என ராகுல் காந்தி கூறியுள்ளார். உ.பியில் பேசிய அவர், போதுமான ஆற்றல், திறமை இருந்தும், இந்தியாவில் 90% மக்கள் அரசு அமைப்புகளில் அங்கமாக இல்லை என வேதனை தெரிவித்துள்ளார். அரசின் கொள்கை உருவாக்கத்துக்கு சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் முக்கியம் என்ற அவர், இறுதிவரை போராடி காங்கிரஸ் கட்சி அதனை நிறைவேற்றும் என உறுதியளித்தார்.
Similar News
News August 23, 2025
உதயநிதி ஸ்டாலின் சொத்து மதிப்பு இவ்வளவா..!

ADMK, BJP என மாறி மாறி திமுக மீதும் உதயநிதி மீதும் ஊழல் புகார்களை கூறி வருகின்றன. இந்நிலையில், உதயநிதியின் சொத்து மதிப்பு எவ்வளவு என்ற பேச்சு எழுந்துள்ளது. 2021 தேர்தலில் ECI-ல் அவர் அளித்த <
News August 23, 2025
தனிப்பெரும்பான்மை ஆட்சி.. அழுத்தி சொன்ன இபிஎஸ்

அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஆட்சி விவகாரம் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. நெல்லை மாநாட்டில் நேற்று பேசிய அமித்ஷா, தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியே அமையும் என மீண்டும் திட்டவட்டமாக கூறினார். இந்நிலையில், திருச்சியில் பரப்புரை மேற்கொண்ட இபிஎஸ், அதற்கு மாறாக பேசியுள்ளார். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என ஆணித்தரமாக அவர் தெரிவித்துள்ளார். இதை எப்படி பார்க்குறீங்க?
News August 23, 2025
‘புலவர்’ அவதாரம் எடுத்த பாரதிராஜா

இயக்குநர் பாரதிராஜா நடிக்கும் புதிய படத்திற்கு ‘புலவர்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் படத்தின் பர்ஸ்ட் லுக்கை தனது X பக்கத்தில் பகிர்ந்துள்ளார். ரவி முருகையா இப்படத்தை இயக்குகிறார். ‘புலவர்’ படம் க்ரைம் கதைக்களத்தை மையமாக கொண்டது. ‘கடைசி விவசாயி’ படத்தை தயாரித்த சூப்பர் டாக்கீஸ் நிறுவனமே இப்படத்தையும் தயாரித்துள்ளது. விரைவில் புலவரை திரையரங்குகளில் எதிர்பார்க்கலாம்.