News November 20, 2024
கேன்சல் செய்த காசோலை கேட்பது ஏன்?

தற்போது ஒரு சில வங்கிகள் கடன்கோரும் நபரிடமிருந்து Cancelled Cheque-ஐ கோருகின்றன. இதில் அச்சப்பட ஒன்றுமில்லை. வங்கிக் கணக்கின் (Proof of Identity) ஆதாரமாக காசோலை கருதப்படுகிறது. அதில் உள்ள தகவல்களை முன்னெச்சரிக்கையாக பதிவு செய்ய கடனளிக்கும் வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பயன்படுத்துகின்றன. இதனைப் பார்த்து, காப்பீடு & ஒரு சில வங்கி & நிதிச் சேவை நிறுவனங்களும் கேன்சல் செய்த காசோலையைக் கேட்கின்றன.
Similar News
News August 15, 2025
CSK வீரருக்கு அடித்த ஜாக்பாட்: அஸ்வின்

CSK வீரர் Devald Brevis-க்கு கடந்த IPL சீசனில் ஜாக்பாட் அடித்ததாக, அந்த அணியின் ஸ்டார் பவுலர் அஸ்வின் தெரிவித்துள்ளார். அவரை வாங்குவதில் கடும் போட்டி நிலவியதால், அதிக விலை கொடுத்து எடுத்ததாக கூறியுள்ளார். அவரது அடிப்படை விலை ₹75 லட்சமாக இருந்த நிலையில், ₹2.2 கோடி கொடுத்து CSK வாங்கியதாக தெரிவித்துள்ளார். குர்ஜப்னீத் சிங்கிற்கு காயம் ஏற்பட்டதால் மாற்று வீரராக Brevis வந்தார்.
News August 15, 2025
ராசி பலன்கள் (15.08.2025)

➤ மேஷம் – பக்தி ➤ ரிஷபம் – பாசம் ➤ மிதுனம் – பயம் ➤ கடகம் – பகை ➤ சிம்மம் – விவேகம் ➤ கன்னி – பாராட்டு ➤ துலாம் – பிரீதி ➤ விருச்சிகம் – உயர்வு ➤ தனுசு – வரவு ➤ மகரம் – தடங்கல் ➤ கும்பம் – வெற்றி ➤ மீனம் – இன்சொல்.
News August 15, 2025
ஆபரேஷன் சிந்தூர் வரலாற்றில் நிலைத்திருக்கும்: ஜனாதிபதி

இந்திய ஜனநாயகம் பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளதாக ஜனாதிபதி திரௌபதி முர்மு தெரிவித்துள்ளார். சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிய அவர், இந்திய அரசியலமைப்பு உலகத்திற்கு தேவையான மாடல் என கூறியுள்ளார். மேலும், இந்திய ராணுவம் எந்த சூழலையும் சமாளிக்கும் என்பது ஆபரேஷன் சிந்தூர் மூலம் நிரூபித்துள்ளதாகவும், தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டமாக அது வரலாற்றில் நிலைத்திருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.