News February 17, 2025

ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை? திமுக எம்.பி. கேள்வி

image

மும்மொழிக் கொள்கையை தமிழகம் ஏற்றால்தான் நிதி தருவோம் என மத்திய அரசு கூறும் நிலையில், இதுகுறித்து திமுக எம்.பி. அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார். ஒவ்வொருவருக்கும் மும்மொழி தேவை என பாஜக சொல்கிறது. அப்படியென்றால், எத்தனை மாநிலங்களில் மூன்றாவது மொழியாக தமிழ் இருக்கிறது? அவ்வளவு ஏன்.. தமிழகத்தில் மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் கூட ஏன் தமிழ் ஆசிரியர்கள் இல்லை என அவர் கேள்வியெழுப்பினார்.

Similar News

News November 24, 2025

புயல் உருவாகும் தேதி அறிவிப்பு.. கனமழை வெளுக்கும்

image

வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி அடுத்த 24 மணிநேரத்தில் வலுவடையும் என IMD தென்மண்டல தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். மேலும், நாளை மறுநாள் (நவ.26) புயலாக உருமாறும் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 5% அதிகம் பெய்துள்ளதாகவும் அடுத்த ஒரு வாரத்திற்கு கனமழை நீடிக்கும் எனவும் அமுதா தெரிவித்துள்ளார்.

News November 24, 2025

வீர வசனம் பேசிவிட்டு, விவசாயிகளுக்கு துரோகம்: EPS

image

நெல் கொள்முதலில் திமுக அரசின் மெத்தனப்போக்கால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக EPS தெரிவித்துள்ளார். அறுவடைக்கு பின்னர் உடனே நெல்லை கொள்முதல் செய்திருந்தால் இவ்வளவு பாதிப்பு இருந்திருக்காது எனக்கூறிய அவர், கொள்முதல் செய்வதிலும் தாமதம், நெல்லை குடோனுக்கு அனுப்புவதிலும் தாமதம் என்று விமர்சித்துள்ளார். டெல்டாக்காரன் என வீரவசனம் பேசிய CM, விவசாயிகளுக்கு விரோதமாக உள்ளார் என்றும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

News November 24, 2025

தமிழகத்தை உலுக்கிய கோர விபத்து.. CM ஸ்டாலின் இரங்கல்

image

தென்காசியில் <<18373837>>2 பஸ்கள் நேருக்குநேர்<<>> மோதிய விபத்தில் உயிரிழந்த 7 பேரின் குடும்பத்திற்கு CM ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ₹3 லட்சம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும், படுகாயமடைந்தவர்களுக்கு ₹1 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!