News April 29, 2025
அமெரிக்கா யார் பக்கம்? நிபுணர்கள் கணிப்பு

இந்தியா-பாக். இடையே போர் மூண்டால், USA இந்தியாவுக்கு ஆதரவாக நிற்குமென ராஜீய நிபுணர்கள் கணித்துள்ளனர். 1971 இந்தியா-பாக். போரின் போது USA, பாக்.-க்கு ஆதரவளித்தது. இந்நிலையில், இந்தியா குவாட் அமைப்பில் இருப்பதாலும், சீனா-பாக். இடையே நல்லுறவு நீடிப்பதாலும், USA இந்தியாவை பகைக்காது என்கின்றனர். அதேசமயம் தெற்காசியாவில் இந்தியா வலிமையடைவதை USA விரும்பாது என்றும் இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
Similar News
News April 29, 2025
கொதிக்கும் வெயில்.. வெளியே வராதீங்க

வேலூர், ஈரோடு, சேலம், திருச்சி, கரூர் உள்ளிட்ட இடங்களில் வெயில் இன்று சதம் அடித்துள்ளது. அக்னி நட்சத்திரம் தொடங்கும் முன்பே வெயில் தாக்கம் அதிகமாக உள்ளதால், மக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். நாளையும் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகமாக இருக்கக்கூடும் என IMD எச்சரித்துள்ளது. எனவே, காலை 11 மணி – பிற்பகல் 3 மணி வரை வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News April 29, 2025
ஆபீசுக்கு வாங்க. இல்லனா வேலைய விட்டு போங்க…

வீட்டிலிருந்து பணி செய்பவர்களை அலுவலகத்திற்கு வரச்சொல்லி கட்டாயப்படுத்த தொடங்கியிருக்கிறது கூகுள் நிறுவனம். கொரோனா நேரத்தில் தற்காப்புக்காக ஊழியர்களுக்கு Work From Home அளித்தன IT நிறுவனங்கள். ஆனால், கொரோனா ஓய்ந்த பின்னரும் ஊழியர்கள் அலுவலகத்திற்கு வர மறுப்பதால், Hybrid Model கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன்படி, பணியாளர்கள் வாரத்திற்கு மூன்று முறையாவது அலுவலகத்திற்கு வர வேண்டும்.
News April 29, 2025
இந்தியாவை தூண்டும் பாகிஸ்தான்

இந்தியாவின் ஆளில்லா ட்ரோன் ஒன்றை பாகிஸ்தான் ராணுவம் இன்று காலை சுட்டு வீழ்த்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை பாகிஸ்தான் ஊடகங்கள் உறுதிபடுத்தியுள்ளன. அந்த ட்ரோன் எல்லைக்கோட்டை தாண்டியதாகவும், ஆகையால் சுடப்பட்டதாகவும் பாகிஸ்தான் கூறியுள்ளது. ஆனால், இதுகுறித்து இந்தியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. எல்லையில் போர் பதற்றம் நிலவும் சூழலில் இந்த சம்பவம் முக்கியத்துவம் பெறுகிறது.