News May 15, 2024
யாருக்கு செவ்வாய் தோஷம் ஏற்படும்?

பூர்வ ஜன்ம வினைகள், பாவங்கள் தோஷங்களாக மாறுவதாக ஞானநூல்கள் கூறுகின்றன. அதாவது, பூர்வ ஜன்மத்தில் பெற்றோரை கவனிக்காதவர், முதிய வயதில் முறையாகப் பேணாதவர், மறுஜன்மத்தில் செவ்வாய் தோஷத்துக்கு ஆளாவர். சகோதர- சகோதரிக்குச் சேரவேண்டிய சொத்துக்களை ஒருவரே அபகரிக்கும் போதும், ஒரு நிலத்தை அநியாய விலைக்கு ஏமாற்றி விற்கும்போதும், அந்த நபரை பூமிகாரகன் செவ்வாயின் கோபம் தோஷமாக தாக்கும்.
Similar News
News March 12, 2026
ALERT: இந்த வயதினருக்கு திடீர் மாரடைப்பு வர அதிக வாய்ப்பு

இந்தியாவில் 45 வயதுக்கு குறைந்தவர்களின் திடீர் மரணங்களில், மாரடைப்புதான் முதன்மையான காரணம் என Indian Journal of Medical Research தெரிவித்துள்ளது. இதில் பலர் வெளிப்புறத்தில் ஆரோக்கியமாகவே தெரிகின்றனர். ஆனால், மன அழுத்தம், குறைவான தூக்கம், புகை- மது பழக்கம், சர்க்கரை, High BP, போதிய உடலுழைப்பு இல்லாமை, கண்டறியப்படாத இதய கோளாறுகள் ஆகியவற்றால் திடீர் மாரடைப்புகளுக்கு உள்ளாகின்றனராம். உஷார் மக்களே!
News March 12, 2026
1 சிலிண்டரின் விலை ₹4,000.. தமிழகத்தில் கலக்கம்

சிலிண்டர் விநியோக பிரச்னையால் தலைநகர் சென்னையிலுள்ள சிறு ஹோட்டல்கள் பல மூடப்பட்டுள்ளன. மேலும், பல பகுதிகளில் கள்ளச் சந்தையில் 1 சிலிண்டர் ₹4,000 வரை விற்கப்படுவதாக ஹோட்டல் உரிமையாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர். இதனால், உணவுப் பொருள்களின் விலையேற்ற வேண்டிய சூழல் இருப்பதாகவும் கூறும் அவர்கள், மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இந்த பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
News March 12, 2026
இந்தியாவின் விவகாரங்களில் USA தலையிடுவதா? ராகுல்

நாம் யாரிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க வேண்டும் என்பதை அமெரிக்கா தீர்மானிப்பது சரியானது அல்ல என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். லோக்சபாவில் பேசிய அவர், யாரிடம் வாங்க வேண்டும், யாரிடம் வாங்கக் கூடாது என்று இந்தியாவுக்கு ஏன் அமெரிக்க அதிபர் அனுமதி கொடுக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அமெரிக்காவுடன் சமரசம் செய்து கொண்டதாகவும் குற்றம்சாட்டியுள்ளார்.


