News October 19, 2025
அடுத்த மதுரை மேயர் யார்?

மாநகராட்சியில் சுமார் ₹200 கோடி சொத்து வரி முறைகேடு புகார்கள் எழுந்ததை அடுத்து மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனையடுத்து அப்பதவிக்கான ரேஸில் 5 பேர் இருப்பதாக தகவல் கசிந்துள்ளது. 79 – வது வார்டு கவுன்சிலர் லக்சிகாஸ்ரீ, 32 வது வார்டு விஜய மௌசுமி, ரோஹினி, வாசுகி சசிகுமார் ஆகியோர் பெயரை தலைமை பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
Similar News
News October 19, 2025
உலகின் 6 அதிசயமான மர்ம இடங்கள்

நீர் நிறமற்றது, காற்று மணமற்றது உள்ளிட்ட இயற்கை நிகழ்வுகள் எப்போதும் இயற்கையாகவே இருக்கும். ஆனால், சில விஷயங்கள் இயற்கைக்கு மாறாக செயல்பட்டாலும், அவையும் நம்மோடே இருக்கின்றன. இவை கட்டுக்கதைகள் அல்ல, NASA உள்ளிட்ட விஞ்ஞான தளங்களால் நிரூபிக்கபட்டவை. இவ்வாறான இயற்கைக்கு எதிராக இருக்கும் இடங்களை மேலே swipe செய்து பாருங்கள். நீங்கள் பார்த்த, ரசித்த, அறிந்த இதுபோன்ற இடங்களை கமெண்ட்டில் சொல்லுங்கள்.
News October 19, 2025
படத்திலாவது H ராஜா மாவீரனாக.. திருமாவளவன்

ஒட்டு மீசை வைத்து H ராஜா படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் என்று திருமாவளவன் விமர்சித்துள்ளார். படத்திலாவது மாவீரனாக தன்னை காட்டிக்கொள்ளலாம் என நினைத்து ராஜா இவ்வாறு செய்வதாகவும் சாடியுள்ளார். கார் மோதல் சம்பவம் நடந்தது வெறும் 20 நொடிகள் தான் என்ற திருமா, இந்த 20 நொடிக்குள் நான் மோதிய நபரை அடிக்க சொன்னதாக தொடர்ந்து பாஜகவினர் குற்றஞ்சாட்டுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
News October 19, 2025
மழையை எதிர்கொள்ள மின்வாரியம் தயார்: சிவசங்கர்

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழ்நாடு மின்வாரியம் தயார் நிலையில் உள்ளதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகு பேட்டியளித்த அவர், தேவையான நேரத்தில் போர்க்கால அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள தயார் நிலையில் இருக்க ஊழியர்களுக்கு அறிவுறுத்தியுள்ளதாக கூறினார். EB பாக்ஸ் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கினால் தெரியப்படுத்தவும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.