News February 28, 2025
பாஜகவின் அடுத்த தலைவர் யார்?

பாஜகவின் அடுத்த தலைவர் மார்ச் 15க்குள் அறிவிக்கப்படலாம் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஏற்கனவே 12 மாநிலங்களில் அக்கட்சியில் அமைப்பு ரீதியாக தேர்தல் நடத்தப்பட்டுள்ளதாகவும், இன்னும் 6 மாநிலத் தலைவர்களைத் தேர்ந்தெடுத்தப்பின் தேசிய தலைவருக்கான அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. தற்போதைய தலைவர் நட்டாவின் பதவிகாலம் கடந்த ஜூன் 2024ல் முடிவடைந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News February 28, 2025
எச்சில் துப்புறதும் பாலியல் தொல்லையும் ஒன்னா!

பாலியல் தொல்லைக்கு ஆளான 3 வயது சிறுமி, சிறுவன் மீது எச்சில் துப்பியதால்தான் பாலியல் தொல்லை நடந்தது என மயிலாடுதுறை ஆட்சியர் மகாபாரதி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. சீர்காழி அருகே சாக்லெட் வாங்கித் தருவதாகக் கூறி சிறுமிக்கு 16 வயது சிறுவன் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதில், இரண்டு பக்கமும் தவறு உள்ளது என ஆட்சியரே பேசியிருப்பது கடுமையான கண்டனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
News February 28, 2025
வாழ்க்கையை கெடுத்துவிட்டார்: ராஜமெளலி மீது புகார்

தெலுங்கு முன்னணி இயக்குநர் ராஜமெளலி மீது, அவரது முன்னாள் நண்பர் ஸ்ரீனிவாஸ் ராவ் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதில், ராஜமெளலி செய்யும் டார்ச்சரால் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்துள்ள அவர், தனது சாவுக்கு அவரும், அவரது மனைவி ரமாவும் தான் காரணம் எனத் தெரிவித்துள்ளார். மேலும், 55 வயதாகும் தனக்கு திருமணம் ஆகாததற்கும், ராஜமெளலி தான் காரணம் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News February 28, 2025
சீனாவின் ஆதிக்கத்தை ஒடுக்கிய இந்தியா

கடந்த 20 ஆண்டு காலமாக சீனாவின் பிடியில் இருந்த எலக்ட்ரானிக்ஸ் சந்தையை இந்தியா தன்வசப் படுத்தியிருக்கிறது. ஆப்பிள் நிறுவன பொருட்களுக்கான உதிரி பாகங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டும் இந்தியா, அதனை சீனா & வியட்நாம் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பணியையும் தொடங்கியிருக்கிறது. உலக வர்த்தகத்தில் முக்கியமான இந்த மைல்கல் மூலம் எலக்ட்ரானிக்ஸ் சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தை இந்தியா ஒடுக்கியுள்ளது.