News November 19, 2024
சசிகலா CM-ஆவதை தடுத்தது யார்? – திண்டுக்கல் சீனிவாசன்

திருச்சி மாவட்ட அதிமுக அலுவலகத்தில் கள ஆய்வு கூட்டம் இன்று(நவ.19) நடைபெற்றது. அதில் பேசிய திண்டுக்கல் சீனிவாசன், அதிமுகவை இபிஎஸ் சிறப்பாக வழிநடத்தி வருவதாக புகழாரம் சூட்டினார். தொடர்ந்து பேசிய அவர், 2017ல் சசிகலா முதல்வராக பதவியேற்பதற்கான பணிகள் நடந்த வேலையில் நீதிமன்றத் தீர்ப்பால் சிறைக்கு சென்றுவிட்டார். அவரை முதல்வராக வரவிடாமல் இறைவன் தடுத்துவிட்டார் என்றும் கூறினார்.
Similar News
News March 28, 2026
என் மீது எனக்கே நம்பிக்கை இருந்ததில்லை: விஜய் சேதுபதி

தன் மீது தனக்கு நம்பிக்கை இருந்ததே இல்லை என விஜய் சேதுபதி கூறியுள்ளார். தன்னுடைய வேலையை மற்றவர்கள் பாராட்டிய பிறகுதான் தனக்கே அந்த வேலையை ’தன்னால் சிறப்பாக செய்யமுடியும்’ என்பது தெரியவரும் என பேசிய அவர், ஆனால், அதற்கு முன் தன் மீது நம்பிக்கை வைக்கும் மனிதர்கள் தனக்கு இருந்திருக்கிறார்கள் என்றார். இதுபோல் பலர் தன்னை நம்பியதால் தான், தன் தன்னம்பிக்கை வளர்ந்ததாகவும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
News March 28, 2026
ஈரான் போர்.. மருந்துகளின் விலை உயர்கிறது

இந்தியாவில் ஏப்ரல் 1-ம் தேதி முதல் பாராசிட்டமால், ஆன்டிபயாட்டிக், Painkiller மருந்துகள் உட்பட மொத்தம் 1000+ மருந்துகளின் விலை உயர்கிறது. இந்த விலை உயர்வு 0.65% இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஈரான் போரால் மருந்து உற்பத்திக்குத் தேவையான மூலப்பொருட்களின் விலை உயர்ந்துள்ளது. அத்துடன் விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில் இந்த விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
News March 28, 2026
5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி.. மகிழ்ச்சி அப்டேட்

அதிமுக தனது முழு தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், அதில் நகைக்கடன் தொடர்பான வாக்குறுதி இடம்பெறவில்லை. பொருளாதாரச் சுமை காரணமாக திமுகவும் இதை தவிர்க்கக்கூடும் என கருதப்பட்டது. ஆனால், 2021-ல் செய்தது போல, இந்த முறையும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி வாக்குறுதியை அளித்து, அதை தேர்தல் யுக்தியாக திமுக பயன்படுத்தலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.


