News August 11, 2024

குல தெய்வம் தெரியாதவர்கள் யாரை வணங்க வேண்டும்?

image

நம் வாழ்வில் எல்லா தடங்கல்களையும் தாண்டி நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு இருக்க வேண்டும். ஒருவேளை தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அண்ணாமலையார், சிவன், பெருமாள் ஆகிய தெய்வங்களில் ஒன்றை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வணங்கினால் வாழ்வில் இன்பம் செழிக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்.

Similar News

News January 9, 2026

மக்களின் வாழ்க்கையை சீரழித்து வரும் பாஜக: ராகுல்

image

நாடு முழுவதும் ‘ஊழல்’ பாஜக கட்சி, மக்களின் வாழ்க்கையை சீரழித்து வருவதாக ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார். ஊழல், அதிகார துஷ்பிரயோகம், ஆணவம் எனும் விஷம் பாஜக அரசியலில் மேலிருந்து கீழ் வரை பரவியுள்ளதாக விமர்சித்துள்ளார். ஏழைகள், நடுத்தர வர்க்கத்தினர் புள்ளி விவரங்களாக மட்டுமே இருப்பதாக கூறிய அவர், மோடிஜியின் ‘டபுள் இன்ஜின் ஆட்சி’ பில்லியனர்களுக்காக மட்டுமே இயங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

News January 9, 2026

மக்கள் நாயகன் காலமானார்

image

நாட்டு விடுதலைக்காக போராடிய மக்கள் நாயகனின் இறுதி மூச்சு இன்று அடங்கியது. திண்டுக்கல்லைச் சேர்ந்த காந்தியவாதி மா.வன்னிக்காளை(92) உடல்நலக் குறைவால் காலமானார். விடுதலைக்கு பிறகும் பெண் குழந்தைகளின் கல்விக்கான சேவையில் ஈடுபட்டுவந்த அவர், அப்பணிக்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதினை 1991-ல் பெற்றார். மக்கள் பணிக்காக சிறந்த காந்தியவாதி உள்பட பல விருதுகளை வென்ற இந்த நாயகன் இப்போது நம்முடன் இல்லை. RIP

News January 9, 2026

பராசக்தியில் ஹிந்தி திணிப்பு வசனம் மாற்றம்

image

‘பராசக்தி’ படத்திற்கு தணிக்கை வாரியம் U/A சான்றிதழ் வழங்கியுள்ள நிலையில், சுமார் 25 இடங்களில் கட் கொடுக்கப்பட்டுள்ளது. அறிஞர் அண்ணாவின் பிரபல முழக்கமான, ‘இங்கு அண்ணாதுரை தான் ஆள்கிறான்’ என்ற வசனம் நீக்கப்பட்டுள்ளது. மேலும், ‘தீ பரவட்டும்’ என்பதற்கு பதில் ‘நீதி பரவட்டும்’ என மாற்றம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஹிந்தி திணிப்பு தொடர்பான வசனங்களும் மியூட் செய்யப்பட்டுள்ளன.

error: Content is protected !!