News August 11, 2024
குல தெய்வம் தெரியாதவர்கள் யாரை வணங்க வேண்டும்?

நம் வாழ்வில் எல்லா தடங்கல்களையும் தாண்டி நிம்மதியும் மகிழ்ச்சியும் நிறைந்த ஒரு வாழ்க்கை அமைய வேண்டும் என்றால் கண்டிப்பாக குலதெய்வ வழிபாடு இருக்க வேண்டும். ஒருவேளை தங்களின் குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள், அண்ணாமலையார், சிவன், பெருமாள் ஆகிய தெய்வங்களில் ஒன்றை குலதெய்வமாக ஏற்றுக்கொண்டு வணங்கினால் வாழ்வில் இன்பம் செழிக்கும் என்கிறார்கள் முன்னோர்கள்.
Similar News
News November 19, 2025
BREAKING: வங்கி கணக்கில் ₹2,000 வந்தது.. செக் பண்ணுங்க

கோவை கொடிசியா வளாகத்தில், தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை PM மோடி தொடங்கி வைத்தார். இதனையடுத்து, PM கிசான் திட்டத்தின் 21-வது தவணையான ₹2,000-ஐ மோடி விடுவித்தார். இதனால் விவசாயிகள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த தவணையை பெற தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையையும் (₹4,000) சேர்த்து வழங்க வழிவகை செய்துள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News November 19, 2025
PM மோடி அணிந்திருக்கும் வாட்ச்சின் சிறப்பு

PM மோடி ஒரு வெற்றிகரமான அரசியல்வாதி மட்டுமல்ல, ஃபேஷன் உணர்வும் கொண்டவர். அந்தவகையில், அவர் அணிந்துள்ள வாட்ச் ஒரு தனி சிறப்பை கொண்டது. அதில், 1947-ல் பிரிட்டிஷ் ஆட்சியில் அச்சிடப்பட்ட புலியின் உருவம் பொறித்த கடைசி ₹1 நாணயம் இடம்பெற்றுள்ளது. ஜெய்ப்பூர் வாட்ச் நிறுவனம், ஜப்பானின் மியோட்டா நிறுவனத்துடன் இணைந்து இந்த வாட்ச்சை தயாரித்துள்ளது. இதன் விலை ₹55,000 -₹60,000 ஆகும்.
News November 19, 2025
தீவிரவாத வழக்கில் கைதான டாக்டர் மீது ஜெயிலில் தாக்குதல்

குஜராத்தில் கடந்த 9-ம் தேதி அகமது மொய்தீன் உட்பட 3 டாக்டர்கள், அபாயகரமான ரசாயனத்துடன் தாக்குதல்கள் நடத்த திட்டமிட்டிருந்ததாக கைது செய்யப்பட்டனர். குஜராத் சபர்மதி சென்ட்ரல் ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்த அகமது மீது, சக கைதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள போலீசார், தாக்குதலின் காரணம் குறித்து விசாரித்து வருவதாக கூறியுள்ளனர்.


