News May 21, 2024
யார் இந்த வி.கே.பாண்டியன்? (2)

யாரையும் எளிதில் நம்பாத நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தார். அதிகாரியான அவர் அரசியலுக்கு வர வேண்டும் என நினைத்தார். அவரின் விருப்பத்தை புரிந்துகொண்ட பாண்டியனும், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு பெற்று, பிஜேடியில் இணைந்தார். கட்சியில் இணைந்த உடன் தேர்தலுக்கான வேலைகளில் தீவிரம் காட்டிய அவர், பாஜகவுடன் கூட்டணியை ஏற்படுத்த முயன்ற நிலையில், அது தோல்வி அடைந்தது.
Similar News
News November 20, 2025
ராம்நாடு: ரூ.40 லட்சம்.. கடல் அட்டைகள் கடத்தல்?

கீழக்கரை புது கிழக்கு தெரு பகுதியில் அரசால் தடைசெய்யப்பட்ட கடல் அட்டைகளை இலங்கைக்கு கடத்துவதற்காக வைத்திருந்ததாக கீழக்கரை போலீசார் வனத்துறையினரிடம் இணைந்து மொட்டை மாடியில் சோதனை நடத்தினர். அப்போது பதப்படுத்தப்பட்ட 400 கிலோ கடல் அட்டைகள் 13 மூட்டைகளில் இருந்தன. இதன் மதிப்பு ரூ.40 லட்சம் எனவும் போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கடல் அட்டைகள் கீழக்கரை வனச்சரகத்தில் ஒப்படைக்கப்பட்டன.
News November 20, 2025
ஆரிய சூழ்ச்சிகளை உடைத்தெறிவோம்: CM ஸ்டாலின்

நீதிக்கட்சி தொடங்கிய நாளையொட்டி X தளத்தில் பதிவிட்டுள்ள CM ஸ்டாலின், மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு, அதிகாரத்தில் உரிய பங்கை பெற்றுத் தந்து, சமூகநீதியை நிலைநாட்ட, தாய் அமைப்பான நீதிக்கட்சி தொடங்கிய நாள் இன்று என குறிப்பிட்டுள்ளார். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிட மாடல் ஆட்சி என மெய்ப்பிப்போம் என்று கூறியுள்ள அவர், ஆரிய சூழ்ச்சிகளை சுக்குநூறாக உடைத்தெறிவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.
News November 20, 2025
உடைகிறதா BJP-சிவசேனா கூட்டணி?

மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் கூட்டணியான பாஜக மற்றும் சிவசேனா இடையே மோதல் வலுத்து வருகிறது. இந்நிலையில், சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினார். அப்போது, மகராஷ்டிரா BJP, சிவசேனா தலைவர்களை பாஜக பக்கம் இழுப்பதாக அதிருப்தி தெரிவித்துள்ளார். கூட்டணி பாதிக்கப்படாமல் பார்த்து கொள்ளுமாறும் அமித்ஷாவிடம் அவர் வலியுறுத்தினார்.


