News March 21, 2025

யார் இந்த நீதிபதி யஷ்வந்த் வர்மா?

image

அலகாபாத்தில் 1969-ம் ஆண்டு பிறந்த <<15836861>>யஷ்வந்த் வர்மா<<>>, பி.காம், எல்.எல்.பி படித்து 1992-ல் வழக்கறிஞராக பணியைத் தொடங்கினார். 2014-ல் அலகாபாத் ஐகோர்ட்டில் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், அடுத்த 2 ஆண்டுகளில் நிரந்த நீதிபதியாக பதவி உயர்வு பெற்றார். 2021-ல் டெல்லி ஐகோர்ட்டுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட யஷ்வந்த், சர்ச்சையில் சிக்கி மீண்டும் அலகாபாத் ஐகோர்ட்டுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Similar News

News July 8, 2025

இன்ஜினியரிங் கவுன்சிலிங் செல்லும் ஸ்டூடண்ட்ஸ்…

image

◆உங்களுக்கு எதில் ஆர்வம் உள்ளதோ அதற்கேற்ற துறையை தேர்ந்தெடுங்க ◆விருப்பமான துறையின் பல்வேறு பாடப் பிரிவுகளையும் அறிந்து கொள்ளுங்கள் ◆தேர்ந்தெடுக்கும் காலேஜின் கல்வித்தரம், உள்கட்டமைப்பு வசதிகள் அறிவது அவசியம் ◆குடும்பத்தின் பொருளாதார நிலைக்கு ஏற்ற கல்வி கட்டணம் உள்ளதா? என்பதை கவனியுங்க ◆தேர்ந்தெடுப்பதற்கு முன் பெற்றோர், ஆசிரியர்களிடம் ஆலோசியுங்கள். அவசரப்படாமல் யோசித்து முடிவெடுங்கள்.

News July 8, 2025

நான் அந்த மாதிரி பெண் இல்லை: சம்யுக்தா

image

தோழியின் திருமணத்துக்குச் சென்ற சம்யுக்தா ஹெக்டே, மணமேடையிலேயே மணப்பெண்ணுக்கு லிப் டு லிப் முத்தம் கொடுத்தார். இதுதொடர்பான போட்டோஸ் வைரலாகவே, ‘நீங்கள் தன்பாலின ஈர்ப்பாளரா?’ என நெட்டிசன்கள் சிலர் கேள்வி எழுப்பினர். இந்நிலையில், தான் அந்த மாதிரி பெண் இல்லை என சம்யுக்தா பதிலளித்துள்ளார். மேலும், இந்த முத்தத்துக்குப் பின்னால் அளவு கடந்த அன்பும், நட்பும் மட்டுமே உள்ளதாகவும் விளக்கமளித்துள்ளார்.

News July 8, 2025

நாயால் 67 பேர் உயிர்பிழைத்த நெகிழ்ச்சி சம்பவம்

image

ஹிமாச்சலின் சியாத்தி கிராமத்தில், நள்ளிரவில் தூங்கிக் கொண்டிருந்த நாய் திடீரென குரைத்துள்ளது. எனவே உரிமையாளர் வந்து பார்க்க, சுவரில் விரிசல் விழுந்து தண்ணீர் உள்ளே வந்துள்ளது. பதறிய அவர், மொத்த கிராமத்தினரையும் அலர்ட் செய்ய, அவர்கள் அருகிலுள்ள கோயிலுக்குச் சென்றுள்ளனர். அடுத்த சில நிமிடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் வீடுகள் சேதமடைந்துள்ளன. நாயின் முன்னெச்சரிக்கையால் 67 பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

error: Content is protected !!