News November 23, 2024
மகாராஷ்டிராவின் முதல்வர் யார்? 3 மணிக்கு பதில்

மகாராஷ்டிராவில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி வெற்றி பெற்றிருக்கும் நிலையில் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்திருக்கிறது. இது தொடர்பாக விடையளிக்க, 3 மணிக்கு 3 தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்திக்கவுள்ளனர். தேவேந்திர ஃபட்நாவிஸ் (பாஜக), ஏக்நாத் ஷிண்டே (சிவசேனா), அஜித் பவார், இந்த மூவரில் யார் முதல்வராக வருவார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
Similar News
News August 23, 2025
நகை கடன்.. மக்களுக்கு முக்கிய தகவல்

வாடிக்கையாளர்கள் கடனை செலுத்த தவறினால் நகைகளை ஏலம் விடுவதே நடைமுறை. அதற்கு முன் உரிமையாளரிடம் முறையாக அறிவித்திருக்க வேண்டும். ஏல இருப்பு விலை(RESERVE PRICE) நகையின் மதிப்பில் 90% இருக்க வேண்டும். 2 ஏலங்கள் தோல்வியுற்ற பிறகு இருப்பு விலையை 85% ஆக குறைக்கலாம். ஏலத்தில் கூடுதலாக கிடைக்கும் தொகையை 7 நாள்களுக்குள் கடன் வாங்கியவரிடம் கொடுக்க வேண்டும். SHARE IT.
News August 23, 2025
அனைவரும் தூய்மை பணிக்கு வர வேண்டும்: திருமாவளவன்

அனைத்து சமூகத்தினரும் தூய்மை பணி செய்ய முன்வர வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார். சென்னையில், பணியின்போது மின்சாரம் தாக்கி பலியான தூய்மை பணியாளர் வரலட்சுமியின் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார். பின்னர் பேசிய அவர், வரலட்சுமியின் குழந்தைகளின் கல்வி செலவை அரசு ஏற்க வேண்டும் எனவும் சென்னையில் விரைவாக மின்சார கேபிள்களை புதை வடிவில் மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
News August 23, 2025
ரேஷன் கார்டுக்கு ₹5,000.. தமிழக அரசு வழங்குவது உறுதி?

<<17478371>>ரேஷன் கார்டுக்கு ₹5,000 <<>>வழங்க TN முடிவு செய்திருப்பதாக 2 நாள்களாக தகவல் பரவி வருகிறது. இதுகுறித்து பேசிய கூட்டுறவுத் துறை அதிகாரி ஒருவர், தீபாவளி பரிசாக மோடி ஜிஎஸ்டி குறைப்பை வெளியிட இருப்பதால், அதற்கு போட்டியாக தமிழக அரசும் தயாராகி வருவதாக குறிப்பிட்டுள்ளார். பொங்கலுக்கு 2 மாதங்களுக்கு முன்பே தீபாவளி நேரத்தில் பொங்கல் பரிசாக ₹5,000 வழங்கும் அறிவிப்பை TN அரசு வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார்.