News April 7, 2025
அந்த தியாகி யார்? பேட்ஜ் உடன் வந்த அதிமுக MLAக்கள்

சட்டப்பேரவைக்கு “அந்த தியாகி யார்” என்ற வாசகத்துடன் அதிமுக MLAக்கள் பேட்ஜ் அணிந்து வந்தனர். டாஸ்மாக்கில் ₹1000 கோடி ஊழல் நடந்துள்ளதாக ED புகார் கூறியிருந்தது. இதை அரசியல் ரீதியாக கையில் எடுத்துள்ள அதிமுக, அந்த தியாகி யார்? என்ற புதிய முழக்கத்தை முன் வைக்க தொடங்கியுள்ளது. முன்னதாக அண்ணா பல்கலை., விவகாரத்தில் ‘யார் அந்த சார்’ என்ற முழக்கம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Similar News
News April 10, 2025
நீட் விவகாரத்தில் திமுக நாடகம்: எல்.முருகன் சாடல்

டாஸ்மாக் முறைகேட்டை திசை திருப்பவே நீட் விவகாரத்தை திமுக கையில் எடுத்துள்ளதாக மத்திய இணையமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். நீட் தேர்வை கொண்டு வந்ததே திமுகவும் காங்கிரஸும்தான் என தெரிவித்த அவர் இன்று நீட்டை வைத்து திமுக நாடகமாடுவதாக அவர் விமர்சித்துள்ளார். தற்போது பழங்குடி, பட்டியல் இன சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருவதாகவும் எல்.முருகன் கூறியுள்ளார்.
News April 10, 2025
தமிழகத்தில் 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலி

தமிழகத்தில் கடந்த 3 மாதங்களில் நாய் கடித்து 8 பேர் பலியாகி இருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நாய் கடித்து காயமடைந்தோர், பலியானோர் குறித்த புள்ளி விவரம் வெளியாகியுள்ளது. அதில் 2025ல் 8 பேர் பலியாகி இருப்பதாகவும், 1.5 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடந்த 2024ம் ஆண்டில் 43 பேர் பலியானதாகவும், 4.80 லட்சம் பேர் தடுப்பூசி போட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News April 10, 2025
கலைஞரின் கனவு இல்லம் குறித்த புது அப்டேட்

‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி ஆலோசிக்க சென்னையில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் இ.பெரியசாமி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. ஏற்கெனவே 13,388 வீடுகளின் பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளன. அடுத்ததாக 2025-26ஆம் நிதியாண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்ட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ₹3,500 கோடி நிதியும் ஒதுக்கப்படுள்ளது.