News February 24, 2025
ஜெர்மன் அதிபராக உள்ள ஃப்ரெட்ரிக் யார்?

ஜெர்மன் அதிபராக (Chancellor) பதவியேற்க உள்ள கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியக் கட்சியின் தலைவர் ஃப்ரெட்ரிக் மெர்ஸ், இதுவரை ஒருமுறை கூட அமைச்சர் உள்ளிட்ட எவ்வித அரசு பதவிகளையும் வகித்ததில்லை. கார்ப்பரேட் வழக்கறிஞரும், பெரும் தொழிலதிபருமான அவர், அதிகார மோதல் காரணமாக 2009ஆம் ஆண்டு கட்சியில் இருந்து வெளியேறி, வழக்கறிஞர் பணியைத் தொடர்ந்தார். 1955ல் ஜெர்மனியின் ப்ரிலான் டவுனில் ஒரு நீதிபதியின் மகனாக பிறந்தார்.
Similar News
News February 24, 2025
‘சீமான்’ பெயரை கூட சொல்லாத காளியம்மாள்

நாதகவில் இருந்து விலகியது தொடர்பாக காளியம்மாள், ஒரு பக்க அளவிற்கு உருக்கமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். சுமார் 29 வரிகள் இருந்த அந்த அறிக்கையில் நாதகவின் பணி, அக்கட்சியின் தொண்டர்கள் செயல்பாடு, அவர்களுடன் பழகியது மற்றும் தனது குமுறலையும் உள்ளத்தில் இருந்து வெளிப்படுத்தி இருந்தார். ஆனால், இவ்வளவு நீண்ட நெடிய அறிக்கையில் ஒரு இடத்தில் கூட ‘சீமான்’ பெயரை கூட அவர் குறிப்பிடவில்லை.
News February 24, 2025
மளமளவென சரியும் பங்குச்சந்தை

தொடர்ந்து சரிவை சந்தித்துவரும் இந்திய பங்குச்சந்தை, இன்றும் 1 சதவீதத்துக்கு மேல் சரிந்துள்ளது. நிஃப்டி இன்று 243 புள்ளிகள் சரிந்து 22,552 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்தது முதலீட்டாளர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது. IT நிறுவனங்கள் மற்றும் வங்கிகளின் பங்குகள் கடும் சரிவைக் கண்டது, சந்தையின் இன்றைய வீழ்ச்சிக்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
News February 24, 2025
அரசு ஊழியர்கள் போராட தடை!

அரசு ஊழியர்கள் நாளை போராடத் தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. வழக்கு மறுவிசாரணைக்கு வரும் வரை சாலை மறியல், பணி புறக்கணிப்பு உள்ளிட்ட எந்தப் போராட்டத்திலும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் அமைப்பான ஜாக்டோ ஜியோ நாளை மாநில அளவில் போராட இருந்த நிலையில், இந்தத் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.