News April 28, 2025
பஹல்காமில் தீவிரவாதிகளுக்கு உதவியது யார்?

J & K பஹல்காமில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு உள்ளூர் ஆதரவாளர்கள் (காஷ்மீரி ஓவர்கிரவுண்ட் ஒர்க்கர்ஸ்) 15 பேர் உதவியதாக புலனாய்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அவர்களில் 5 பேர் அடையாளம் காணப்பட்டு அதில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதால் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
Similar News
News April 30, 2025
IPL: KKR அபார வெற்றி

DC அணிக்கு எதிரான இன்றைய IPL போட்டியில், KKR அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. முதலில் பேட்டிங் செய்த KKR அணியின் ரகுவன்ஷி அதிகபட்சமாக 44 ரன்கள் குவித்தார். இதனால், அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 204 ரன்கள் குவித்தது. இதனை சேஸ் செய்த DC அணியின் டுப்ளசி 62 ரன்கள் எடுத்தார். இருப்பினும், இலக்கை எட்ட முடியாமல் DC அணி தோல்வியை தழுவியது.
News April 30, 2025
குளு குளு AC-யில் தூக்கமா? அப்போ உஷார்…

கோடை வெயில் பட்டையை கிளப்பும் நேரத்தில் AC இல்லாம தூங்க முடியல என சொல்பவரா நீங்கள்? உங்களுக்கு முக்கிய எச்சரிக்கையை மருத்துவர்கள் கொடுத்துள்ளனர். 20°C கீழே AC வைத்து தூங்கினால், உடலில் பல பிரச்னைகள் வர வாய்ப்புள்ளதாம். முக்கியமாக சளி, இருமல், தோல் நோய்கள் உள்ளிட்டவை வருமாம். ஹார்மோன் உற்பத்தி, நீர்சத்து குறைவு உள்ளிட்ட பாதிப்பும் ஏற்படுமாம். AC அளவு 24°C – 26°C இருப்பதுதான் உடலுக்கு நல்லதாம்.
News April 30, 2025
சென்னை வரும் அமித்ஷா.. பாஜகவுக்கு 40 சீட்?

சமீபத்தில் சென்னை வந்த அமித்ஷா, அதிமுக உடனான கூட்டணியை உறுதி செய்தார். இந்நிலையில் மே 3-ல் மீண்டும் அவர் சென்னை வரவுள்ளதாக புதிய தகவல் வெளியாகியுள்ளது. இந்த பயணத்தின்போது, சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவின் செயல்பாடு, தொகுதி பங்கீட்டில் 40 சீட் வரை அதிமுகவிடம் கேட்பது குறித்தும், திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள், முறைகேடுகளை மக்களிடம் கொண்டு செல்வது குறித்தும் ஆலோசிக்க இருப்பதாக கூறப்படுகிறது.