News August 10, 2024
யார் யாருக்கு மாதம் ₹1000 உதவித்தொகை?

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப் படிப்பு, சட்டம் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். 8, 10ஆம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்களும் இதன் மூலம் பயன்பெறலாம்.
Similar News
News November 30, 2025
புயல் கோரத்தாண்டவம்.. கொத்து கொத்தாக மரணம்

டிட்வா புயல் கோரத் தாண்டவத்தால் இலங்கையில் மக்கள் கொத்து கொத்தாக மரணித்துள்ளனர். புயலால் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண் சரிவில் சிக்கி இதுவரை 159 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தில் காணாமல் போனவர்களின் எண்ணிக்கை 191-ஆக உயர்ந்துள்ளது. இதனால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. பல மாவட்டங்களில் மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
News November 30, 2025
தேர்தலுக்காக தவெக போடும் அடுத்த ஸ்கெட்ச்!

2026 தேர்தலில் கட்சியில் இல்லாதவர்களையும் வேட்பாளர்களாக களமிறக்க விஜய் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. அதாவது தேர்தலில் போட்டியிட தவெகவினருக்கு 40% தொகுதிகளையும், துறை சார்ந்த ஆளுமைகள், பிரபலங்கள், சமூகநல செயற்பாட்டாளர்களுக்கு 60% தொகுதிகளையும் ஒதுக்கலாம் என்கின்றனர். இதற்காக மக்கள் மத்தியில் செல்வாக்கு உள்ளவர்களை தேடும் பணியில் தவெக இறங்கியிருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.
News November 30, 2025
ஆக்டிவ் இல்லாத சிம் கார்டில் யூஸ் பண்றவங்களுக்கு செக்!

மொபைலில் ஆக்டிவாக உள்ள சிம் கார்டு இல்லாவிட்டால், WhatsApp, Telegram, ShareChat உள்ளிட்ட SM தளங்களை பயன்படுத்த முடியாமல் இருக்குமாறு செய்ய வேண்டும் என அந்தந்த நிறுவனங்களுக்கு DoT அறிவுறுத்தியுள்ளது. 90 நாள்களுக்கு, குறிப்பிட்ட App உடன் சிம் கார்டு செயல்பாட்டில் இருக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. இதன் மூலம் சைபர் மோசடிகளில் இருந்து தப்பிக்க முடியுமாம்.


