News August 10, 2024
யார் யாருக்கு மாதம் ₹1000 உதவித்தொகை?

‘தமிழ்ப்புதல்வன்’ திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 12ஆம் வகுப்பு வரை தமிழ்வழியில் படித்து தேர்ச்சி பெற்று கல்லூரியில் படிக்கும் அனைவருக்கும் இத்திட்டம் பொருந்தும். பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, மருத்துவப் படிப்பு, சட்டம் படிக்கும் மாணவர்கள் பயன்பெறலாம். 8, 10ஆம் வகுப்பு முடித்து தொழிற்பயிற்சி படிப்பவர்களும் இதன் மூலம் பயன்பெறலாம்.
Similar News
News December 1, 2025
செயலில் காட்டுங்க PM மோடி: செல்வப்பெருந்தகை

தமிழுக்கான உண்மையான மரியாதையை நிதி ஒதுக்கீடு, வளர்ச்சி திட்டங்கள் மூலம் PM மோடி காட்டவேண்டும் என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். மத்திய அரசு சமஸ்கிருதத்துக்காக ₹2532 கோடி செலவிட்டதாகவும், ஆனால் தமிழ் உள்பட 5 மொழிகளுக்கு ₹147.56 கோடி மட்டுமே செலவிட்டதாகவும் சுட்டிக்காட்டினார். மேலும், PM தமிழை உயர்த்தி பேசியதில் பெருமை தான் என்ற அவர், ஆனால் செயலில் TN-ஐ புறக்கணிப்பதாக விமர்சித்துள்ளார்.
News December 1, 2025
உலகின் தலையெழுத்து மாறிய தினம் இன்று!

2019, டிசம்பர் 1-ம் தேதி, உலக தலையெழுத்து மாறிய தினம். சீனாவின் ஊகானில் உலகின் முதல் கொரோனா பாதிப்பு பதிவு செய்யப்பட்டது. வேகமாக பரவிய பாதிப்பால், உலக நாடுகளின் எல்லைகள் மூடப்பட்டன, பல குடும்பங்கள் பிரிந்தன, வீதிகள் வெறிச்சோடின, கோடிக்கணக்கான உயிர்கள் மறைந்தன. இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும், கொரோனா காயம் மனித மனங்களில் நீங்காத ரணமாக இருக்கும். உங்க வாழ்க்கையை கொரோனா எப்படி பாதித்தது?
News December 1, 2025
நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் CPR: PM மோடி

துணை ஜனாதிபதியாக பதவியேற்ற பின், சி.பி.ராதாகிருஷ்ணன் பங்கேற்கும் முதல் ராஜ்ய சபா கூட்டம் என்பதால், அவருக்கு PM மோடி வாழ்த்து தெரிவித்தார். தொடர்ந்து பேசிய PM, எளிய குடும்பத்தில் இருந்து வந்த CPR, நாட்டுக்காக வாழ்வை அர்ப்பணித்தவர் என்று புகழ்ந்தார். கோவை குண்டுவெடிப்பில் CPR உயிர் தப்பியதை பற்றி குறிப்பிட்டு பேசிய PM, உங்களுடன் நீண்ட நாள்களாக பணியாற்றி வருவதில் மகிழ்ச்சி என்று கூறினார்.


