News December 20, 2024
அமித்ஷா பேச யார் உரிமை தந்தது..? பா. ரஞ்சித்

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித்திடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அமித் ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான். அதனால், எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்கரை தடுக்கவும் முடியாது. மீறவும் முடியாது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு ஜெய்பீம்” எனக் கூறினார்.
Similar News
News July 4, 2025
ஜூலை 7-ம் தேதி அரசு விடுமுறை இல்லை

மொஹரம் பண்டிகைக்கு ஜூலை 7-ம் தேதி அரசு விடுமுறை என்ற தகவல் சில நாள்களாக சமூக வலைதளங்களில் பரவியது. இதனால் பள்ளி மாணவர்கள் முதல் அரசு ஊழியர்கள் வரை, 3 நாள்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறதே என மகிழ்ந்தனர். ஆனால் மொஹரம் பண்டிகை ஜூலை 6-ல் கொண்டாடப்படுகிறது. அதில் மாற்றமில்லை. இதனால் சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் தவறானது என தமிழக அரசின் சரிபார்ப்பகம் விளக்கம் அளித்துள்ளது. ஜூலை 7-க்கு லீவு இல்லை.
News July 4, 2025
விபரீதத்தில் முடிந்த பாலியல் ஆர்வம்

டெல்லியை சேர்ந்த 27 வயது பெண், அடிவயிற்று வலி, மலம் கழிக்க முடியாத நிலை போன்ற அறிகுறிகளுடன் ஹாஸ்பிடலுக்கு சென்றுள்ளார். அவரை டாக்டர்கள் சோதித்த போது, மலக்குடலுக்குள் மாய்ஸ்சுரைசர் பாட்டில் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பாலியல் ஆர்வத்தில் உறுப்பில் பாட்டிலை நுழைக்க, அது உள்ளே மாட்டிக் கொண்டதாக பெண் கூறினார். அதன்பின், sigmoidoscopy-யை பயன்படுத்தி பாட்டிலை டாக்டர்கள் வெளியே எடுத்தனர்.
News July 4, 2025
பழைய ஓய்வூதிய திட்டம்: விரைவில் குட் நியூஸ்

தமிழகத்தில் தற்போது பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் அமலில் உள்ளது. அதாவது இதில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்களுக்கு உறுதி செய்யப்பட்ட ஓய்வூதியம் கிடைக்காது. இதனால் பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்துவோம் என கூறி ஆட்சிக்கு வந்த திமுக அதனை நிறைவேற்றாததால் அரசு ஊழியர்கள் அதிருப்தியில் உள்ளனர். இதனிடையே பழைய ஓய்வூதியம் குறித்த அறிவிப்பை CM ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.