News December 20, 2024

அமித்ஷா பேச யார் உரிமை தந்தது..? பா. ரஞ்சித்

image

அம்பேத்கர் குறித்து அமித்ஷா பேசிய பேச்சு பெரும் சர்ச்சையாகியுள்ளது. இந்நிலையில், இதுகுறித்து இயக்குநர் பா. ரஞ்சித்திடம் நிருபர்கள் கேள்வியெழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், “அமித் ஷா பேசுவதற்கு யார் உரிமை தந்தது? அந்த உரிமையை வாங்கிக் கொடுத்ததே அம்பேத்கர்தான். அதனால், எந்த சக்தி நினைத்தாலும் அம்பேத்கரை தடுக்கவும் முடியாது. மீறவும் முடியாது. பாபா சாஹேப் அம்பேத்கருக்கு ஜெய்பீம்” எனக் கூறினார்.

Similar News

News September 7, 2025

கட்சியில் இருந்து நீக்கவில்லை.. பின்வாங்கும் இபிஎஸ்

image

செங்கோட்டையன் உள்ளிட்டோரை கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவித்த EPS, ஏன் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து நீக்கவில்லை என்ற பேச்சு எழுந்துள்ளது. பொதுவாக, கட்சிக்கு எதிராக செயல்பட்டால் ‘அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கம்’ என்றே அதிமுக தலைமை அறிக்கை வெளியிடும். இந்த விவகாரத்தில் ஏன் EPS பின்வாங்குகிறார் என பலரும் கேள்வி எழுப்புகின்றனர்.

News September 7, 2025

EPSஐ வேட்பாளராக ஏற்க முடியாது: TTV திட்டவட்டம்

image

தன்னை சந்திக்கவே EPS அச்சப்படுவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். EPS-ஐ எதிர்த்து கட்சி தொடங்கிய தான், அவரை எப்படி முதல்வர் வேட்பாளராக ஏற்றுக்கொள்வேன் எனவும் கேள்வி எழுப்பினார். நயினார் தன்னையும், OPS-ஐயும் திட்டமிட்டு அவமதித்ததாகவும் குற்றஞ்சாட்டினார். <<17637974>>OPS செங்கோட்டையனை <<>>சந்திப்பதாக கூறிய நிலையில், TTV-யும் அவரை சந்திக்க உள்ளதாக கூறியுள்ளார். புதிய கூட்டணி உருவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 7, 2025

சந்திர கிரகணத்தில் தானம் செய்தால் இவ்ளோ நல்லதா!

image

கிரகணத்துக்கு பிறகு வெள்ளை பொருட்களை தானம் செய்தால் பணம் வந்துசேரும் என்ற ஐதீகம் உள்ளது.
*வெள்ளியை தானம் செய்வதால், கூர்மையான அறிவு, புத்திசாலித்தனம், செல்வம் & செழிப்பு என சகல செல்வங்களும் கிடைக்கும்.
*அரிசி சந்திரனுடன் தொடர்புடையதால், அரிசியை தானம் செய்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
*பால் தானம் செய்வதால் அன்னை லட்சுமி மகிழ்ச்சியடைவார். இதனால் புகழ், மன அமைதி கிடைக்கும். SHARE IT.

error: Content is protected !!