News March 18, 2025
IPL பிளேஆப் சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை? ஜகாதி கணிப்பு

2025 IPL தொடரில் பிளேஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் CSK வீரர் சதாப் ஜகாதி தனது கணிப்பினை வெளியிட்டுள்ளார். சென்னை, கொல்கத்தா, குஜராத் ஆகிய 3 அணிகளும், டெல்லி மற்றும் லக்னோ அணிகளில் ஏதாவது ஒன்றும் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் என கணித்துள்ளார். வரும் 23ஆம் தேதி தொடங்கும் IPL தொடரில் முதல் ஆட்டத்தில் பெங்களூரு அணியை KKR அணி எதிர்கொள்கிறது. உங்க கணிப்பு என்ன? கமெண்ட் பண்ணுங்க.
Similar News
News September 21, 2025
துரோகத்தின் கூடாரம் அதிமுக: CM ஸ்டாலின்

இஸ்லாமியர்களுக்கு ஒரு இடர் என்றால் முதலில் வந்து நிற்பது திமுக தான் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். முத்தலாக் சட்டம் வந்த போது அதிமுக இரட்டை வேடம் போட்டது என்றும், அதனால் தான் அன்வர் ராஜா போன்றவர்கள் துரோகத்தின் கூடாரமான அதிமுகவை புறக்கணித்து திமுகவில் இணைந்தனர் எனவும் அவர் கூறியுள்ளார். மேலும், CIA-விற்கு எதிராக போராடியவர்கள் மீது அதிமுக அரசு தடியடி நடத்தியது என்று CM ஸ்டாலின் சாடினார்.
News September 21, 2025
சீனாவால் உயரும் தங்கம் விலை

தங்கம் விலை தொடர்ந்து உச்சத்தில் இருக்க சீனாவும் முக்கிய காரணம் என்கின்றனர் நிபுணர்கள். அமெரிக்காவுடன் வர்த்தக போர், சர்வதேச பணவீக்கம், முதலீட்டு மார்க்கெட்களில் சரிவு போன்ற காரணங்களால், சீன ரிசர்வ் வங்கியும் நிறுவனங்களும் தங்கத்தை வாங்கிக் குவிக்கின்றனவாம். உலக பொருளாதார நிலை சரிந்தாலும், சீனா தொடர்ந்து தங்கத்தை கொள்முதல் செய்கிறதாம். சந்தையில் தேவை இருப்பதாலேயே, தங்க விலையும் சரியாமல் உள்ளது.
News September 21, 2025
தீபாவளிக்கு இரட்டை போனஸ்.. அரசு HAPPY NEWS

மத்திய அரசு ஊழியர்களுக்கான DA(அகவிலைப்படி) உயர்வு தீபாவளியையொட்டி அக்.15-ம் தேதி அறிவிக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி, 55%-ல் இருந்து 58% ஆக உயர்த்தி DA வழங்கப்பட உள்ளது. மேலும் டபுள் போனஸாக, ஜூலை மாதத்தில் இருந்து 3% உயர்வை கணக்கிட்டு அக்டோபர் சம்பளத்தில் 3 மாத நிலுவைத் தொகை சேர்த்து வழங்கப்படுமாம். மத்திய அரசு ஊழியர்களின் தீபாவளி செலவுக்கு பிரச்னை இருக்காது.