News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
Similar News
News December 23, 2025
காதலில் நீங்கள் எந்த வகை என்று கூறுங்களேன் ❤️❤️

திருமணம் என்பது இரு மனங்களின் இணைப்பு என்பதை தாண்டி, எதார்த்தமான பல விஷயங்கள் அதில் உள்ளன. நிலம், பொருளாதாரம், இருதரப்பு உறவுகள் உள்ளிட்டவை ஒரு தம்பதியின் மனநிலையை அதிகமாக இயக்குகிறது. அப்படிப்பட்ட காதலின் 6 நிலைகளை அறிய மேலே உள்ள படங்களை Swipe செய்து பாருங்கள். நீங்கள் அதில் எந்த நிலையில் உள்ளீர்கள் என்பதை கமெண்ட்டில் சொல்லிவிட்டு, உங்கள் கணவர்/ மனைவியிடம் மனம்விட்டு கூறுங்கள். All is Love
News December 23, 2025
நாளை முதல் மழை பெய்ய வாய்ப்பு

குமரிக்கடல் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் நாளை முதல் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக IMD கணித்துள்ளது. டிச.24, 25 தேதிகளில் சில கடலோர மாவட்டங்களில் 26, 27 தேதிகளில் தென்தமிழகம், டெல்டா மாவட்டங்களில் மழை பெய்யக் கூடும். டிச.26 வரை தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் வெப்பநிலை இயல்பைவிட 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக் கூடும்.
News December 23, 2025
₹8 கோடி அபேஸ்.. தற்கொலைக்கு முயன்ற Ex IPS!

சைபர் மோசடியில் ₹8 கோடி இழந்த பஞ்சாப் Ex IPS அமர் சிங் சஹால், 12 பக்க கடிதம் எழுதி வைத்துவிட்டு, தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். ஆன்லைன் மோசடி, அதிக லாபம் என Whatsapp, telegram-ல் மோசடி கும்பல் அவரிடம் இருந்து பணத்தை சுருட்டியுள்ளது. அமர் தற்போது ICU-ல் உள்ளார். IPS அதிகாரிக்கே இந்த நிலைமை என்றால், சாமானிய மக்களின் நிலை என்ன என்ற கேள்வி எழாமல் இல்லை.


