News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
Similar News
News December 17, 2025
நயினார் நாகேந்திரன் உறுதி செய்தார்

2026 பொங்கல் பண்டிகையை, PM மோடி தமிழகத்தில் கொண்டாடவுள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில், ஜன.9-ல் நிறைவுறும் தனது யாத்திரையில் PM மோடி (அ) அமித்ஷா பங்கேற்பார்கள் என நயினார் உறுதிபட தெரிவித்துள்ளார். மேலும், டிச.23-ல் மத்திய அமைச்சர் <<18586855>>பியூஷ் கோயல்<<>> தமிழகம் வரவுள்ளதாகவும் கூறியுள்ளார். அடுத்தடுத்து பாஜக முக்கிய தலைவர்களின் தமிழக வருகை அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது.
News December 17, 2025
எந்த கேரக்டரில் நடிக்கிறேன் என்பதே தெரியாது: VJS

‘அரசன்’ படத்தில் தன்னுடைய கேரக்டர் என்ன, எத்தனை நாள் ஷூட்டிங் என எதுவுமே தனக்கு தெரியாது என விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார். இந்த கேரக்டர் எழுதும்போது உங்க ஞாபகம் வருது சேது, எழுதட்டுமா என வெற்றிமாறன் சார் கேட்டார். உங்க ஞாபகத்தில் வருவதே நல்ல விஷயம், எழுதுங்க சார் என ஓகே சொல்லிவிட்டேன். எனக்கு எதுவுமே தெரியவில்லை என்றாலும், அனைத்தையும் வெற்றி சார் பார்த்துக்கொள்வார் என்றும் அவர் கூறியுள்ளார்.
News December 17, 2025
அஜித்குமார் மரணம்.. அதிர்ச்சியூட்டும் புதிய தகவல்

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இவ்வழக்கில், A7 ஆக <<18544051>>DSP<<>> சண்முகசுந்தரம் சேர்க்கப்பட்டார். இதனையடுத்து, அவர் முன்ஜாமின் கோரி மதுரை HC அமர்வில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், இதன் மீதான விசாரணையின் போது, DSP சண்முகசுந்தரத்தை கைது செய்து விசாரிக்கவுள்ளதாக CBI கூறியுள்ளது. இதனால், விரைவில் அவர் கைதாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


