News March 28, 2025
பிளே ஆப் செல்லும் அணிகள் எவை? இர்பான் கணிப்பு

ஐ.பி.எல்.2025 ஐபிஎல் தொடரில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் அணிகள் குறித்து முன்னாள் வீரர் இர்பான் பதான் தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் உள்ளிட்ட அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல அதிக வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இன்னும் சில வாரங்களில் இதற்கான விடை நமக்கு கிடைத்துவிடும்.
Similar News
News December 12, 2025
IPL ஏலம்: அதிரடி ஆல்-ரவுண்டர்களின் லிஸ்ட்..

IPL ஏலத்தில், சிறப்பான பினிஷிங் மற்றும் சில ஓவர்கள் பந்துவீசக்கூடிய ஆல்-ரவுண்டர்களை வாங்க அணிகள் முனைப்பு காட்டுகின்றன. இந்நிலையில், முதல் ஆல்-ரவுண்டர்கள் செட்டில் இடம்பெற்றுள்ள வீரர்கள் பட்டியல் வெளியாகியுள்ளது. V.iyer, அட்கின்ஸன், ஹசரங்கா, ரச்சின், லிவிங்ஸ்டனின் அடிப்படை ஏலத்தொகை ₹2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மல்டர், தீபக் ஹூடாவும் இப்பட்டியலில் உள்ளனர். யாருக்கு ஜாக்பாட் அடிக்கப்போகுது?
News December 12, 2025
324 சமுதாய மக்களும் வளர வேண்டும்: ராமதாஸ்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கோரி ராமதாஸ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பேசிய ராமதாஸ், வன்னியர்கள் மட்டுமல்ல 324 சமுதாய மக்களும் படிக்க வேண்டும், முன்னேற வேண்டும் என வலியுறுத்தினார். அனைத்து சமூக மக்களும் நலமாக வாழ வேண்டும் என்றார். மேலும், இடஒதுக்கீடு என்பது மக்களுக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்துக் கொடுப்பது என குறிப்பிட்டார்.
News December 12, 2025
சற்றுமுன்: அஜித் குமார் மரணம்… புதிய தகவல்

சிவகங்கை, திருப்புவனம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு தமிழகத்தையே உலுக்கியது. இதில் 6 போலீஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது புதிய திருப்பமாக, சஸ்பெண்ட் செய்யப்பட்ட DSP சண்முக சுந்தரம் A7 ஆக சேர்க்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக கூடுதல் குற்றப்பத்திரிக்கையை CBI, மதுரை கோர்ட்டில் சமர்ப்பித்துள்ளது. இவ்வழக்கில் உள்ள சாட்சியங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதாக போலீஸ் பாதுகாப்பு உள்ளது.


