News March 24, 2025
முதலில் வந்தது ஆணா? பெண்ணா? MP சர்ச்சை கருத்து

வழக்கமாக ஒரு விஷயத்தில் முதல் முயற்சி தவறாகவே முடியும் என்பதால், கடவுள் முதலில் ஆண்களை தான் படைத்திருப்பார் என சமாஜ்வாதி எம்.பி டிம்பிள் யாதவ் தெரிவித்துள்ளார். உலகில் முதலில் தோன்றியது ஆணா? பெண்ணா? என்ற கேள்விக்கு அவர் இப்பதிலை கூறியுள்ளார். மேலும் 2வது முறை, கடவுள் பெண்களைப் படைத்து, அவர்களுக்குத் தேவையான திறனை கொடுத்திருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இவரின் கருத்து பற்றி என்ன நினைக்கிறீங்க?
Similar News
News November 27, 2025
பாமகவில் சமரசம் செய்கிறாரா செல்வப்பெருந்தகை?

அன்புமணியும், ராமதாஸும் இணைந்து செயல்பட்டால் நல்லதுதான். ஆனால் அவர்களை சமரசப்படுத்தும் முயற்சியை எடுக்கவில்லை என செல்வப்பெருந்தகை கூறியுள்ளார். 40 ஆண்டுகளுக்கு மேலாக ராமதாஸ் தனக்கு பரிச்சயமானவர் என்ற அவர், அதனால்தான் ஹாஸ்பிடலில் இருந்தபோது அவரை சந்தித்ததாகவும் விளக்கமளித்துள்ளார். மேலும், இதில் எந்த அரசியல் கலப்பும் இல்லை எனவும் சமரச தூதுவராக செயல்பட அவசியமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News November 27, 2025
நடிகர் ஜெயராம் கைது செய்யப்படுகிறாரா?

சபரிமலை தங்கம் திருட்டு வழக்கில் <<18367317>>ஜெயராம்<<>> முக்கிய சாட்சியாக சேர்க்கப்பட உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில், டிசம்பரில் நடைபெறும் கேரள உள்ளாட்சி தேர்தலுக்கு பின் அவரிடம் விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, துவார பாலகர் சிலைகள், சபரிமலை கோயில் கதவு நிலைகளை வீட்டில் வைத்து பூஜை நடத்த ஏற்பாடு செய்த விவகாரத்தில் ஜெயராமை கைது செய்ய, SIT முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
News November 27, 2025
7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு!

தென்மேற்கு வங்க கடலில் <<18399959>>காற்றழுத்த தாழ்வு மண்டலம்<<>> உருவான நிலையில், சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால் ஆகிய 7 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற IMD அறிவுறுத்தியுள்ளது. பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு நீடிக்கிறது. வட தமிழக கடலோர பகுதிகளில் காற்று மணிக்கு 50- 60 கி.மீ., வேகத்தில் வீசும் என கூறப்பட்டுள்ளது.


