News July 12, 2024

உலகிலேயே எந்த நாட்டின் கரன்சி அதிக மதிப்புடையது?

image

உலக நாடுகள் பல்வேறு பெயர்களில் கரன்சிகளை பயன்படுத்துகின்றன. இந்த கரன்சிகளில் எது அதிக மதிப்புடையது என கேள்வி எழுவதுண்டு. அதற்கான விடையை தெரிந்து கொள்வோம். குவைத் தினார்தான் அதிக மதிப்புடைய கரன்சியாகும். இந்திய ரூபாய் மதிப்பில் ₹271 என்பது ஒரு தினாருக்கு சமமாகும். அதன் மதிப்பு அதிகமாக இருப்பதற்கு, பெட்ரோலியப் பொருள் ஏற்றுமதியில் குவைத் மிகப்பெரும் சக்தியாக இருப்பதும் ஒரு காரணமாகும்.

Similar News

News November 21, 2025

திமுக வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை: நயினார்

image

தென்காசியில் சட்டக் கல்லூரி, மருத்துவக் கல்லூரி கொண்டு வருவோம் என சொன்ன திமுக, அதை நிறைவேற்றவில்லை என நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். மேலும் நான்கரை ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஒரு மருத்துவக் கல்லூரியை கூட தமிழ்நாட்டுக்கு திமுக கொண்டு வரவில்லை என்றும், அதிமுக ஆட்சியில் 11 கல்லூரிகள் கொண்டுவரப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். திமுக ஆட்சி மீது மக்கள் வெறுப்பாக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News November 21, 2025

ஜடேஜாவை CSK விட்டது ஆச்சரியமாக உள்ளது: கும்ளே

image

ஜடேஜா போன்று ஒரு நபரை CSK டிரேட் செய்தது ஆச்சரியம் அளிப்பதாக அனில் கும்ப்ளே தெரிவித்துள்ளார். வழக்கமாக சென்னை அணி இதுபோன்று செய்து பார்த்ததில்லை என தெரிவித்த அவர், அதை அவர்கள் செய்திருக்க கூடாது எனவும் கூறியுள்ளார். CSK , ராஜஸ்தானின் டிரேட் IPL-லில் முக்கியமானது என்றும், ஆனால் RR ஜடேஜாவுக்கு கேப்டன் பொறுப்பு கொடுக்குமா என்பது முக்கியமான கேள்வி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News November 21, 2025

வரலாற்றில் இன்று

image

1947 – இந்தியா விடுதலை அடைந்த பின்னர் முதன் முறையாக அஞ்சல் தலை வெளியிடப்பட்டது
1963 – இந்தியாவின் முதலாவது ஈரடுக்கு உளவு ஏவுகணை நைக்-அப்பாச்சி ஏவப்பட்டது.
1991 – சுதந்திர போராட்ட வீரர் தி. சு.அவிநாசிலிங்கம் மறைந்தார்.
2022 – தமிழறிஞர் ஔவை நடராசன் மறைந்த தினம்.

error: Content is protected !!