News April 27, 2025
நிறுத்தப்பட்ட சிந்து நதி நீர் இனி எங்கு செல்லும்?

பஹல்காம் தாக்குதலை அடுத்து, சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தியுள்ளது. இதனால் பாக். உடனே பாதிக்கப்படாது. காரணம், பாக்.ல் இருக்கும் சிந்து, ஜீலம், செனாப் நதிகளில் பாக்லிஹார், கிஷங்கங்கா அணைகள் என சிறிய உள்கட்டமைப்புகளை மட்டுமே இந்தியா கொண்டுள்ளது. இது குறைந்த அளவே நீரைத் தேக்கும். ஆனால், இந்தியா அணைகளை கட்டி நீரை முழுவதுமாக நிறுத்தினால் பாக்.-க்கு நீண்டகால பிரச்னையாக மாறும்.
Similar News
News November 3, 2025
EPS சிறை செல்ல திண்டுக்கல் சீனிவாசனுக்கு ஆசை: TTV

கோடநாடு வழக்கில் EPS-ஐ கைது செய்ய திண்டுக்கல் சீனிவாசன் விரும்புவதாக TTV தினகரன் தெரிவித்துள்ளார். கோடநாடு வழக்கில் EPS தான் A1 என செங்கோட்டையன் கூறியிருந்த நிலையில், உண்மையாகவே குற்றத்தை நிரூப்பித்துவிட்டு EPS-யை கைது செய்யுங்கள் என திண்டுக்கல் சீனிவாசன் கூறியிருந்தார். இந்நிலையில், EPS உடன் இருப்பவர்கள் மனவருத்தத்தில் இருப்பதாகவும், EPS-ன் வீழ்ச்சிக்காக காத்திருப்பதாகவும் TTV கூறியுள்ளார்.
News November 3, 2025
இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா?

உலகெங்கிலும் நாம் அறியாத எத்தனையோ விசித்திரங்களும், வியப்புகளும் நிறைந்திருக்கின்றன. நிலப்பரப்பு, கலாச்சாரம், வரலாறு, சட்டங்கள் என நம் கற்பனைக்கும் அப்பாற்பட்ட பல விஷயங்கள் உள்ளன. அப்படி, உலகின் பல இடங்களில் காணப்படும், நாம் நம்ப முடியாத சில சுவாரஸ்ய தகவல்களை அறிய மேலே SWIPE பண்ணுங்க…
News November 3, 2025
செங்கோட்டையனை நீக்கியது வேதனை: கார்த்தி சிதம்பரம்

அதிமுகவில் இருந்து செங்கோட்டையனை நீக்கியது வருத்தமளிப்பதாக கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். பாஜகவுடன் கூட்டணி வைத்ததில் இருந்தே அதிமுக என்ற மாபெரும் கட்சி கீழ்நோக்கி செல்கிறது என்று விமர்சித்த அவர், மூத்த அரசியல் தலைவர், பல ஆண்டுகாலம் கட்சிக்காக உழைத்தவரை நீக்கியது வேதனை அளிக்கிறது என்றார். மேலும், இது உள்கட்சி விவகாரம் என்பதால், இதற்கு மேல் பேச முடியாது எனவும் குறிப்பிட்டார்.


