News August 10, 2025
ஜக்தீப் தன்கர் எங்கே இருக்கிறார்? காங்., MP கேள்வி

துணை ஜனாதிபதி பதவியை ராஜினாமா செய்த பின் ஜக்தீப் தன்கரை ஏன் யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை என காங்., MP கபில் சிபல் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் எங்கே இருக்கிறார், பாதுகாப்பாக இருக்கிறாரா எனவும், அவர் இருக்கும் இடம் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு தெரியும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், தன்கருடன் எந்த தொடர்பும் இல்லாததால் நாட்டு மக்கள் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News August 11, 2025
யுத்த நாயகனின் ‘The Great Indian Escape’ பாத்துருக்கீங்களா?

மரணமடைந்த ‘<<17365976>>யுத்த நாயகன்<<>>’ டிகே பருல்கரின் வாழ்க்கை வரலாற்றை மையமாக கொண்டு ‘The Great Indian Escape’ (2019) என்ற படம் வெளிவந்தது. 1971 போரின் போது, பாகிஸ்தானில் சிக்கிக் கொண்ட இவர், சிறையில் இருந்து தப்பிக்கும் போது, தன்னுடன் சேர்த்து 2 இந்திய வீரர்களையும் பத்திரமாக மீட்டு கொண்டு வந்தார். விமானப்படை வீரரான டிகே பருல்கர் தனது வீரத்திற்காக வாயு சேனா மற்றும் விஷிஷ்ட் சேனா பதக்கங்களை பெற்றுள்ளார்.
News August 11, 2025
ஆவணி 1ம் தேதி ஓபிஎஸ் சுற்றுப்பயணம்

பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறிய OPS, அடுத்தடுத்து அரசியல் ரீதியான நகர்வுகளை எடுத்து வருகிறார். மீண்டும் கூட்டணிக்கு வர வேண்டும் என்ற பாஜகவின் அழைப்பை ஏற்க மறுத்துவிட்ட அவர், ஆவணி 1-ம் தேதி (ஆக.17) முதல் சுற்றுப்பயணம் மேற்கொள்ள முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சுற்றுப்பயணத்தின்போது, NDA கூட்டணியில் இருந்து வெளியேறியது குறித்து மக்களிடம் விளக்கமளிக்கவும் திட்டமிட்டுள்ளாராம்.
News August 11, 2025
இந்தியருக்கு அரசியல் சாசனமே புனித நூல்: பி.ஆர்.கவாய்

தான் எப்போதும் அதிகார பரவலாக்கத்தின் ஆதரவாளர் என்று SC தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் தெரிவித்துள்ளார். நீதி, மக்களின் வீட்டு வாசலை சென்றடைய வேண்டும்; அதிகார மண்டபங்கள் இருக்கக்கூடாது. நாட்டின் வளர்ச்சிக்காக நமது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பலி கொடுக்கக் கூடாது எனக் கூறிய அவர், ஒவ்வொரு இந்தியருக்கும் அரசியல் சாசனமே புனித நூல், அதைத்தான் நம்ப வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.