News February 16, 2025
EPS எங்கு பதுங்கி உள்ளார்? செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News January 11, 2026
அண்ணாவை பார்த்து யாரும் பயப்படல: நயினார்

விஜய்க்கு அழுத்தம் கொடுக்க மத்திய அரசு சென்சார் போர்டை கையில் எடுத்திருக்கிறது என CM ஸ்டாலின் <<18812153>>கண்டனம்<<>> தெரிவித்திருந்தார். இதற்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், பராசக்தி படத்தை மட்டும் எப்படி சென்சார் போர்டு ரிலீஸ் செய்தது என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், சென்சார் போர்டு அவர்களுக்கு உள்ள விதிப்படி செயல்படுகின்றனர் எனவும் அண்ணாவை பார்த்து யாரும் பயப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
பொங்கல் பணம்.. புதிய சர்ச்சை வெடித்தது

பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் பொங்கல் பரிசு பணம் அறிவிக்கப்பட்ட நிலையில், பொங்கலுக்கு ₹3000 எதற்கு என சீமான் கேள்வி எழுப்பியுள்ளதால் புதிய சர்ச்சை வெடித்துள்ளது. இதனால், ₹6,800 கோடியை அரசு இழப்பதாக கூறிய அவர், ஏற்கனவே மாநிலத்துக்கு ₹10 லட்சம் கோடி கடன் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினர். இந்தத் தொகை இருந்தால், இந்தியாவை உலகிலேயே தலைசிறந்த நாடாக என்னால் மாற்ற முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
News January 11, 2026
FLASH: ‘ஜெ.குரு பாமக’ உதயமானது

‘ஜெ.குரு பா.ம.க’ என்ற பெயரில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை புதிய கட்சியை தொடங்கியுள்ளார். நேற்று சேலத்தில் நடந்த கட்சி தொடக்க விழாவில் கட்சியின் கொடியையும் அவர் அறிமுகம் செய்தார். வன்னியர்களுக்கு துரோகம் செய்த அதிமுகவுடன் அன்புமணி கூட்டணி வைத்துள்ளதாகவும், பாஜகவில் ஒரு வன்னியர் கூட இல்லை என்றும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், வரும் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.


