News February 16, 2025
EPS எங்கு பதுங்கி உள்ளார்? செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News December 31, 2025
பொங்கல் பரிசு.. தித்திக்கும் செய்தி வெளியானது

பொங்கல் பரிசு பற்றிய அறிவிப்பு, புத்தாண்டு நாளில் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், ஜன.2-க்குள் டோக்கன்களை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும் என்று கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அறிவுறுத்தியுள்ளார். முற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பிற்பகல் 100 ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசை விநியோகம் செய்திட ஏதுவாக இந்த டோக்கன்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
News December 31, 2025
21 நாள்கள் விதி தெரியுமா?

நாளை புது வருடம் பிறக்கிறது. பிடிக்காத அல்லது கெட்ட பழக்கத்தை கைவிட வேண்டுமா? அல்லது புதிய விஷயம் ஒன்றை தினசரி வாடிக்கையாக்க வேண்டுமா? இதற்கு இந்த 21 நாள்கள் விதி கைகொடுக்கும். எந்த ஒரு விஷயத்தையும் தினசரி தொடர்ந்து 21 நாள்களுக்கு செய்தால், அது அப்படியே பழக்கமாகிவிடும் என்கிறது இந்த விதி. இதையே 90 நாள்கள் செய்தால், அது உங்கள் வாழ்க்கை முறையாகவே மாறிவிடும். ட்ரை பண்ணி பாருங்க.
News December 31, 2025
ஜனவரி 1 முதல் சம்பளம் உயருகிறது!

ஜனவரி 1-ம் தேதி முதல் 8-வது ஊதியக் குழு அமலுக்கு வர வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர். இதனால் மத்திய அரசு ஊழியர்களின் அடிப்படை சம்பளம் 20% – 35% வரை உயரலாம். கடந்த 2025 நவம்பரில் 8-வது ஊதியக் குழு அமைக்கப்பட்ட நிலையில், உயர்த்தப்பட்ட சம்பளம் & ஓய்வூதியம் 2026 ஜனவரியிலிருந்து அமல்படுத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இருப்பினும், இதுகுறித்த Official தகவல் வெளியாகவில்லை.


