News February 16, 2025
EPS எங்கு பதுங்கி உள்ளார்? செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News December 28, 2025
சற்றுமுன்: செங்கோட்டையன் கொடுத்த அதிர்ச்சி

பல அதிமுக தலைவர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் சொல்லி வந்த நிலையில், இன்று Ex. MLA <<18692753>>சி.கிருஷ்ணன்<<>> அக்கட்சியில் இணைந்துள்ளார். இந்நிலையில் OPS, டிடிவி தினகரன் இணைவார்களா என செய்தியாளர்கள் செங்கோட்டையனிடம் கேட்டனர். அதற்கு, பொங்கலுக்கு முன் இருவரும் இணைவார்கள், அதிமுக Ex அமைச்சர்கள் சிலரும் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியுள்ளார். இது அதிமுக தரப்புக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
News December 28, 2025
மீனவர்கள் கைதை தடுக்க CM ஸ்டாலின் கடிதம்

ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், அவர்களை விடுவிக்க கோரி CM ஸ்டாலின், மத்திய அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். இலங்கை கடற்படையின் கைது நடவடிக்கைகளால், மீனவர்களின் வாழ்வாதாரத்தில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் இதுபோல் சம்பவங்கள் நடக்காமல் தடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
News December 28, 2025
ஹாதி கொலை குற்றவாளிகள் இந்தியாவுக்கு தப்பியுள்ளனரா?

மாணவர் தலைவர் ஹாதி படுகொலை வழக்கில் தொடர்புடைய 2 முக்கிய நபர்கள் இந்தியாவுக்கு தப்பியுள்ளதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்துள்ளனர். ஹலுகாட் எல்லை வழியாக மேகாலயாவுக்குள் அவர்கள் நுழைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இருவரையும் கைது செய்ய இந்திய அரசின் உதவியை வங்கதேசம் நாடியுள்ளது. ஆனால், இந்தியாவிற்குள் இருவரும் நுழைந்துள்ளதை இதுவரை மத்திய அரசு தரப்பில் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.


