News February 16, 2025
EPS எங்கு பதுங்கி உள்ளார்? செந்தில் பாலாஜி

மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் நிதி என மத்திய அரசு கூறிவரும் நிலையில், திமுகவுக்கு எதிராக மட்டும் கம்பு சுத்தும் பழனிசாமி தற்போது எங்கே சென்று பதுங்கி உள்ளார் என அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். மாநில பிரச்னைக்காக குரல் கொடுக்க வேண்டாமா எனவும், இருமொழிக் கொள்கையே தாரக மந்திரம் என கூறிய அண்ணாவின் பெயரை, ஒளிந்து கொண்டிருக்கும் பழனிசாமி விட்டுவிட வேண்டும் எனவும் சாடியுள்ளார்.
Similar News
News December 8, 2025
திலீப் விடுவிப்பு: மேல்முறையீடு செய்கிறோம்.. நடிகை தரப்பு!

பாலியல் வன்கொடுமை வழக்கில் இருந்து <<18502283>>நடிகர் திலீப்<<>> விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நடிகை தரப்பு மேல்முறையீடு செய்ய உள்ளதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். போதிய ஆதாரங்கள் இல்லாததால், திலீப் விடுதலை செய்யப்படுவதாக எர்ணாகுளம் கோர்ட் தீர்ப்பளித்திருந்தது. அதே நேரம், நடிகையின் டிரைவர் உள்பட 6 பேர் குற்றவாளிகள் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
News December 8, 2025
தொழில் தொடங்க ₹10 லட்சம் தரும் அரசு திட்டம்!

TN பெண்கள் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், தொழில் தொடங்க பெண்களுக்கு 25% மானியத்துடன் ₹10 லட்சம் கடன் கிடைக்கும். அத்துடன், தொழில் வளர்ச்சிக்கு தேவையான திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் வழங்கப்படும். இதனை பெற, தொழிலுக்கான மொத்த செலவில் 5% விண்ணப்பதாரரின் பங்களிப்பாக இருக்க வேண்டும். 18 – 55 வயது வரையுள்ள பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம். திட்டத்துக்கு அப்ளை பண்ண <
News December 8, 2025
BREAKING: மு.க.அழகிரிக்கு அதிர்ச்சி

கோயில் நிலத்தை அபகரித்த வழக்கில் விடுவிக்க மறுத்த ஐகோர்ட் உத்தரவை எதிர்த்து மு.க.அழகிரி SC-யில் மேல்முறையீடு செய்தார். இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஐகோர்ட் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக்கூறி வழக்கை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். மேலும், வழக்கு விசாரணையை சந்திக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது, அழகிரி தரப்புக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


