News January 24, 2025
என்னை எங்க வந்து நிறுத்திருக்க பாத்தியா..!

சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், வளர்ப்புப் பூனையால் வேலையை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து வைத்திருந்த அந்த பெண், வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வது என யோசித்து அனுப்பாமலே வைத்துள்ளார். ஆனால், அவரது வளர்ப்பு பூனை தவறுதலாக Enter பட்டனை அழுத்தியுள்ளது. இதனால், அவர் தனது வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 13, 2025
தொண்டர்களாக மாற மறுக்கும் ரசிகர்கள்?

விஜய் அரசியல் கட்சி தொடங்கி ஒன்றரை ஆண்டாகிவிட்டது. இன்னும் கட்சி சார்ந்த நிகழ்வுகளுக்கு செல்லும் தவெக தொண்டர்கள், தியேட்டருக்கு செல்வது போன்ற மனநிலையிலேயே உள்ளனர். விஜய்யின் பேச்சை மீறி குழந்தைகளை கட்சி நிகழ்ச்சிகளுக்கு அழைத்துச் செல்வது, அருகில் இருக்கும் கட்டடங்கள், மரங்கள் மீதேறி அலப்பறை செய்வது போன்ற நிலையே தொடர்கிறது. இன்றைய சம்பவங்களும் அதையே சொல்கின்றன. தேர்தலுக்குள் இந்த நிலை மாறுமா?
News September 13, 2025
மணிப்பூர் மக்களை மோடி அவமதித்துவிட்டார்: கார்கே

மணிப்பூரில் மோடி செலவிடும் 3 மணி நேரம் மக்கள் மீதான கருணை அல்ல என மல்லிகார்ஜுன கார்கே விமர்சித்துள்ளார். 46 நாடுகளுக்கு பயணம் செய்த மோடிக்கு, சொந்த மக்களுக்கு அனுதாபத்தை தெரிவிக்க நேரமில்லை என குற்றம்சாட்டினார். கடைசியாக ஜனவரி 2022-ம் ஆண்டு தேர்தலுக்காக மட்டுமே மோடி மணிப்பூர் வந்ததாகவும், மோடியின் தற்போதைய பயணத்தால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை எனவும் சாடியுள்ளார்.
News September 13, 2025
1 GB பிளானை நீக்கியது குறித்து விளக்கம் கேட்கும் TRAI

எண்ட்ரி லெவல் 1 GB பிளானை நீக்கியது குறித்து ஜியோ, ஏர்டெலிடம் TRAI விளக்கம் கேட்டுள்ளது. இந்த ₹249 பிளானை நீக்கியது கஸ்டமர்களுக்கு மேலதிக சுமைகளை கொடுக்கும் எனவும் தெரிவித்துள்ளது. ஆனால், இந்த பிளான் ஆஃப்லைனில் கிடைப்பதாக ஜியோ தெரிவித்த நிலையில், கஸ்டமர்களின் விருப்ப தேர்வின் அடிப்படையிலேயே பிளான் நீக்கப்பட்டதாக ஏர்டெல் கூறியுள்ளது. தற்போதைய எண்ட்ரி லெவல் பிளான் ₹299 ஆகும்.