News January 24, 2025
என்னை எங்க வந்து நிறுத்திருக்க பாத்தியா..!

சீனாவின் சோங்கிங் பகுதியைச் சேர்ந்த இளம்பெண், வளர்ப்புப் பூனையால் வேலையை பறிகொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. தனது லேப்டாப்பில் ராஜினாமா கடிதத்தை டைப் செய்து வைத்திருந்த அந்த பெண், வேலை போய்விட்டால் வருமானத்திற்கு என்ன செய்வது என யோசித்து அனுப்பாமலே வைத்துள்ளார். ஆனால், அவரது வளர்ப்பு பூனை தவறுதலாக Enter பட்டனை அழுத்தியுள்ளது. இதனால், அவர் தனது வேலையை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
Similar News
News November 26, 2025
கர்நாடகா CM மாற்றமா? முடிவுக்கு வரும் பஞ்சாயத்து!

கர்நாடகா காங்கிரஸ் கோஷ்டி பூசல் குறித்து, வரும் டிச.,1 நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக, தலைமை முடிவெடுக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெரும்பாலும் CM மற்றும் அமைச்சரவை மாற்றம் இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக டிகே சிவக்குமார் ராகுல் காந்தியை தொடர்பு கொள்ள முயற்சித்த நிலையில், அவர் பொருத்திற்குமாறு கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News November 26, 2025
பிரபல குடும்பத்தில் துயர சம்பவம்

பிரபல கம்லா பசந்த் (பான் மசாலா) கம்பெனியின் உரிமையாளர் கமல் கிஷோரின் வீட்டில் துயரமான சம்பவம் நடந்துள்ளது. கமல் கிஷோரின் மருமகள் தீப்தி செளராசியா நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். கணவர் ஹர்பிரீத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவர், உயிரை மாய்த்துக் கொண்டதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுதொடர்பாக விசாரணை நடத்தும் டெல்லி போலீஸ், ஒரு முக்கியமான டைரியை கைப்பற்றியுள்ளது.
News November 26, 2025
விலை குறைந்தது.. மக்கள் நிம்மதி!

மழை, வரத்து குறைவால் கடந்த சில நாள்களாக உயர்ந்து வந்த காய்கறிகளின் விலை சற்று குறைந்துள்ளது. மேட்டுப்பாளையம் சந்தையில் நேற்று ₹40-₹60-க்கு விற்பனையான கேரட் இன்று ₹25- ₹40-க்கும், நேற்று ₹60-₹70-க்கும் விற்பனையான பீட்ரூட் இன்று ₹30-₹40-க்கும் விற்பனையாகிறது. சென்னை, மதுரை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தக்காளி, முருங்கை உள்ளிட்ட காய்கறிகளின் விலை வரும் நாள்களில் குறையும் என வியாபாரிகள் கூறுகின்றனர்.


