News October 9, 2025
கரூர் மக்களை விஜய் எப்போது சந்திக்கிறார்? புது தகவல்

கரூரில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்க அனுமதி கோரியிருந்தார் விஜய். இந்நிலையில், இம்முறை அசம்பாவிதம் ஏதும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக, அக்.13-ல் தனியார் மண்டபத்தில் இந்த சந்திப்பை நடத்த போலீசிடம் அனுமதி கேட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதில் பங்கேற்க உயிரிழந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும், தவெகவின் முக்கிய நிர்வாகிகளுக்கும் மட்டுமே அனுமதி வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
Similar News
News October 9, 2025
இந்தியா வந்த தாலிபான் அமைச்சர்

ஆப்கன் அமைச்சர் அமீர்கான் முத்தகி இந்தியா வந்தடைந்தார். வரும் 16-ம் தேதி வரை அவர் இந்தியாவில் இருப்பார் எனவும், அப்போது இருதரப்பு உறவுகள் மற்றும் பிராந்திய பிரச்னைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாக மத்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஆப்கன் – பாகிஸ்தான் இடையேயான உறவு விரிசல் அடைந்துள்ள நிலையில், அவரது இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
News October 9, 2025
இந்த அரிதான Blood Group உங்களுக்கு இருக்கா?

உலகில் 40–50 பேருக்கு மட்டுமே ‘Golden Blood’ (Rh null) எனும் Blood Group உள்ளது. இவ்வகை ரத்தத்தில் Rh ஆன்டிஜென்கள் இல்லாததே இதனை அரிதாக்குகிறது. Rh null ரத்த வகையினரின் உடல் மற்ற ரத்த வகைகளை ஏற்காது. எனவே, சர்ஜரிகளுக்கு முன்பாக உடலில் இருந்து ரத்தத்தை எடுத்து, டாக்டர்கள் அதனை Freeze செய்கின்றனர். தகவல் பிடித்திருந்தால் லைக் பண்ணலாமே!
News October 9, 2025
கமல் வீட்டில் பரபரப்பு.. உடனே சென்ற போலீஸ்

சென்னை ஆழ்வார்பேட்டையில் கமல் வீட்டில் அமைந்துள்ள மநீம தலைமை அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மோப்பநாய், வெடிகுண்டு நிபுணர்கள் உடன் போலீஸார் விரைந்துள்ளனர். முன்னதாக, இன்று காலை விஜய்யின் நீலாங்கரை வீட்டுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. ஆனால், சோதனையின் முடிவில் புரளி என தெரியவந்தது. மேலும் மிரட்டல் விடுத்தவரை போலீஸார் கைது செய்தனர்.