News April 14, 2025
மலையாள நடிகர் திலீப் சிக்கிய வழக்கின் தீர்ப்பு எப்போது?

2017-ல் பிரபல நடிகை காரில் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கின் இறுதி விசாரணை மே 21-ல் நடைபெறும் என கோர்ட் அறிவித்துள்ளது. இந்த வழக்கில் நடிகர் திலீப் கைதாகி 3 மாதங்களுக்கு பிறகு ஜாமினில் வெளியே வந்தார். 8 ஆண்டுகளாக நடைபெற்று வரும் வழக்கு தற்போது முடிவுக்கு வருகிறது. இறுதி விசாரணை நாளில் பாதிக்கப்பட்டவர், எதிர்தரப்பினர் வாதங்களை முன்வைத்தால் தீர்ப்பு மற்றொரு நாளில் வழங்கப்படும்.
Similar News
News January 19, 2026
நாளை காங்., செயற்குழு கூட்டம்

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நாளை காங்கிரஸ் கமிட்டி செயற்குழு கூட்டம் நடைபெறும் என்று செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார். 2026 தேர்தல் ஆயத்தப் பணிகள் குறித்தும், கட்சியை வலுப்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசிக்க இந்த செயற்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. தேசிய தலைவர்களும் பங்கேற்கும் இக்கூட்டத்தில் கூட்டணி, தொகுதிப்பங்கீடு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 19, 2026
பிரபல நடிகர் காலமானார்… கண்ணீர் அஞ்சலி!

‘மிரட்டல் அடி (Kung Fu Hustle)’ படம் மூலம் இந்திய ரசிகர்களை கவர்ந்த நடிகர் புரூஸ் லியுங்கின் (77) திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1970, 80கள் முதலே குங்பூ படங்களில் கோலோச்சிய இவர் புரூஸ் லீ, ஜாக்கி சானுக்கு இணையாக தற்காப்புக்கலை உலகில் மதிக்கப்படுகிறார். இவரது மறைவு ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆரோக்கியமாக இருந்த இவரின் திடீர் மறைவுக்கு என்ன காரணம் என்பது மர்மமாகவே உள்ளது.
News January 19, 2026
புருவங்கள் அடர்த்தியா வளர அருமையான TIPS

முகத்திற்கு அழகு சேர்ப்பதே இந்த புருவங்கள் தான். இவை அழகாக தெரிய, அதன் அடர்த்தி அதிகரிக்க இந்த இயற்கை வழிமுறையை பின்பற்றலாம். ஆமணக்கு எண்ணெயை தடவி 10 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள். பின் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதில் இருக்கும் புரதம், கொழுப்பு புருவங்களின் முடி வளர்ச்சிக்கு உதவும். இதை உங்களுக்கு தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.


