News February 14, 2025

IPL முதல் போட்டி எப்போது, ​​யாருக்கு இடையே நடக்கும்?

image

இந்த ஆண்டுக்கான IPL அட்டவணை குறித்த முக்கிய விவரங்களை Cricbuzz இணையதளம் வெளியிட்டுள்ளது. “BCCI தரவுப்படி, முதல் போட்டி KKR மற்றும் RCB இடையே மார்ச் 22 (சனிக்கிழமை) அன்று ஈடன் கார்டனில் நடைபெற உள்ளது. கடந்த ஆண்டு ரன்னர்-அப் அணியான சன்ரைசர்ஸ் அடுத்தநாள் பிற்பகல் உப்பலில் ராஜஸ்தான் ராயல்ஸை எதிர்கொள்கிறது.
இறுதிப் போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் மே 25ஆம் தேதி நடைபெறும் என்றும் கூறியுள்ளது.

Similar News

News February 14, 2025

தினமும் ஒரு பொன்மொழி!

image

✍நீங்கள் வாழும் வாழ்க்கையை நேசியுங்கள்; நீங்கள் நேசிக்கும் வாழ்க்கையை வாழுங்கள்.✍அரசியல் மற்றும் தேவாலயம் இரண்டும் ஒன்றே; இரண்டும் மக்களை அறியாமையில் வைத்திருக்கின்றன. ✍ஏதோ ஓர் இடத்தில் தொடங்குங்கள்; இல்லையென்றால், எப்போதுமே தொடங்க மாட்டீர்கள். ✍ஒவ்வொரு மனிதனுக்கும் தனது விதியைத் தீர்மானிக்க உரிமை உண்டு. ✍மக்கள் தமது பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வை உருவாக்க, புரட்சி தேவைப்படுகிறது- பாப் மார்லி.

News February 14, 2025

இன்று முதல் WPL-2025 தொடக்கம்!

image

WPL-2025 போட்டிகள் இன்று முதல் தொடங்குகின்றன. இன்று நடக்கும் முதல் போட்டியில் குஜராத் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. போட்டி வதோதரா மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டாரில் நேரலையில் பார்க்கலாம். 5 அணிகள் பங்கேற்கும் இந்த T20 லீக் 2023ல் தொடங்கியது. முதல் சீசனில் MI அணியும், இரண்டாவது சீசனில் RCBயும் வெற்றி பெற்றன.

News February 14, 2025

தலாய்லாமாவுக்கு ‘இசட்’ பிரிவு பாதுகாப்பு!

image

திபெத்திய மத குரு தலாய்லாமாவின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக உளவு அமைப்புகள் எச்சரித்ததை அடுத்து, அவருக்கு இசட் பிரிவு பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கியுள்ளது. திபெத் விவகாரத்தில் தலாய்லாமா மீது கோபத்தில் உள்ள சீனா, அவரை கொல்ல பல்வேறு வழிகளில் முயற்சிப்பதாக இந்திய உளவு அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில், இமாச்சலில் உள்ள அவருக்கு இந்த பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!