News December 29, 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. புத்தாண்டு நெருங்கும் வேளையில், DA உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு 2025 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி அறிவிப்பு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின் அடிப்படையில் அமைவதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News September 12, 2025
Beauty Tip: பிம்பிள்ஸ் பிரச்னைக்கு சிம்பிள் தீர்வு!

என்ன செய்தாலும் முகத்தில் உள்ள பிம்பிள்கள் மறைய மாட்டேங்குதா? இதை செய்தால் 2 வாரங்களில் பிம்பிள் எல்லாம் மறைந்துவிடும். ➤ஒரு டேபிள் ஸ்பூன் வேப்பிலை பொடி & சிவப்பு சந்தன பொடியை எடுத்துக்கொள்ளுங்கள் ➤இரண்டையும் சேர்த்து நீர்விட்டு பேஸ்ட் போல் அரைத்து முகத்தில் தடவவும் ➤15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள். வாரத்தில் 3 முறை இதை செய்துவந்தால் முகத்தில் உள்ள பிம்பிள் மறையும். SHARE.
News September 12, 2025
கொள்ளை சிரிப்பில் தங்கப்பூ!

கன்னட படத்தில் அறிமுகமாகி, தமிழ் சினிமாவின் மோஸ்ட் வாண்டட் ஹீரோயினாக உருவெடுத்துள்ளார் ருக்மினி வசந்த். அவரது லேட்டஸ்ட் போட்டோஷூட் போட்டோக்களை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். கலர் கலரான டிரெஸ்களில், கொள்ளை கொள்ளும் சிரிப்பில் அவர், விதவிதமாக போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ் மழை பொழிந்து வருகின்றனர். மேலே Swipe செய்து நீங்களும் அந்த ‘தங்கப்பூவை’ பாருங்கள்.
News September 12, 2025
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும் கர்நாடகம்

கர்நாடகாவில் வரும் 22-ம் தேதி முதல் புதிய சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அம்மாநில CM சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய கணக்கெடுப்பு சமூக, பொருளாதார, கல்வி அடிப்படையில் எடுக்கப்படும் எனவும், 2015-ல் எடுக்கப்பட்ட சாதிவாரி கணக்கெடுப்பு செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முன்னதாக பிஹார், தெலங்கானாவில் மாநில அரசுகளே சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தின. தமிழ்நாட்டிலும் இத்தகைய கோரிக்கை உள்ளது.