News December 29, 2024
மத்திய அரசு ஊழியர்களுக்கு DA உயர்வு எப்போது?

மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளியாக தாமதம் ஏற்படலாம் எனக் கூறப்படுகிறது. புத்தாண்டு நெருங்கும் வேளையில், DA உயர்வுக்காக ஊழியர்கள் காத்திருக்கின்றனர். இது தொடர்பான அறிவிப்பு 2025 ஜனவரியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி அறிவிப்பு அகில இந்திய நுகர்வோர் விலைக் குறியீடு தரவுகளின் அடிப்படையில் அமைவதால் அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News July 10, 2025
பாரீஸ் நகரில் ரஷ்மிகா..!

Onitsuka Tiger என்பது ஒரு ஜப்பானிய ஷூ மற்றும் ஃபேஷன் பிராண்ட் ஆகும். இந்தியாவில் இந்த பிராண்ட்டின் விளம்பர தூதராக Pan India Actress ஆன ரஷ்மிகா மந்தனாவை கடந்த 2023-ம் ஆண்டே தேர்வு செய்தனர். தற்போது பாரீஸ் நகரில் இந்த பிராண்ட் சார்பாக நடைபெறும் நிகழ்வில் பங்கேற்பதற்காக பாரீஸ் சென்ற ரஷ்மிகா அந்த நகரில் அவர் எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
News July 10, 2025
இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை: முத்தரசன்

சமீபத்தில் தனது சுற்றுப்பயணத்தின் போது பேசிய இபிஎஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் கொஞ்சம் கொஞ்சமாக தேய்கின்றன. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி இருக்கிறதா? இல்லையா? என்ற அளவுக்கு முகவரி இல்லாமல் இருப்பதாக விமர்சித்தார். இதற்கு பதிலளித்த சிபிஐ கட்சியின் மாநில செயலாளார் முத்தரசன், இபிஎஸ்-க்கு நாவடக்கம் தேவை என்றும், MGR-க்கு அரசியலில் நிரந்தர முகவரி பெற்று தந்ததே சிபிஐ தான் எனவும் அவர் கூறினார்.
News July 10, 2025
ஜூலை 10… வரலாற்றில் இன்று!

*1806 – வேலூர் சிப்பாய் எழுச்சி – வேலூர் கோட்டையில் நிகழ்ந்த எழுச்சியில் பல ஆங்கிலேயப் படையினர் கொல்லப்பட்டனர். *1949 – கிரிக்கெட் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பிறந்தநாள் *1973 – வங்கதேசத்தை அங்கீகரிக்கும் தீர்மானம் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம் *2006 – இந்தியாவில் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இன்சாட்-4 செயற்கைக்கோளை ஏற்றிச்சென்ற ஜி.எஸ்.எல்.வி. விண்கலம் இயந்திரக் கோளாறினால் கடலில் வீழ்ந்தது.