News April 29, 2025

திமுகவினர் மனங்களில் இருந்து ‘காலனி’ எப்போது அகலும்?

image

ஆவணங்களிலிருந்து ‘காலனி’யை நீக்கினால் போதுமா, திமுகவினர் மனங்களில் இருந்து எப்போது அகலும் என எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார். தி.மலை, பாணாம்பட்டு கிராமத்தில் குடிநீர் தொட்டியின் மீது மனிதக் கழிவு பூசப்பட்டுள்ளது. இதுபோன்ற கொடூரச் செயல்கள் CM கவனத்திற்கு வருகிறதா? என கேள்வி எழுப்பிய அவர், திராவிட மாடல் ஆட்சியில் பட்டியலின மக்கள் படும் துன்பங்களுக்கு இதுவரை தீர்வு கிடைக்கவில்லை என சாடினார்.

Similar News

News November 21, 2025

திருவள்ளூர்: 206 கிலோ குட்கா பறிமுதல்

image

திருவள்ளூர்: மாதவரம் ரவுண்டானா அருகே இன்று(நவ.21) அதிகாலை போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை போலீசார் நிறுத்த முயன்றனர். போலீசாரை கண்டதும் காரில் இருந்த இருவர் தப்பி ஓடினர். இதனையடுத்து காரில் சென்று சோதனை நடத்திய போது மூட்டை மூட்டையாக 206 கிலோ குட்கா பொருட்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. இச்சம்பவம் தொடர்பாக மாதவரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

News November 21, 2025

கஸ்டமர்களை ஏமாற்றியதால் செக்!

image

ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்யும் போது, முதலில் விலை குறைவாக இருக்கும். ஆனால், பில்லிங்கின் போது, கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதை பலரும் எதிர்கொண்டிருப்போம். இப்படி கஸ்டமர்களை ஏமாற்றுவதை ‘டார்க் பேட்டர்ன்’ மூலம் இ- காமர்ஸ் நிறுவனங்கள் செய்துவந்தன. இதற்கு மத்திய அரசு கடிவாளம் போட்ட நிலையில் Swiggy, Zomato உள்ளிட்ட 26 நிறுவனங்கள், டார்க் பேட்டர்ன்களை நீக்கியுள்ளன.

News November 21, 2025

2-வது டெஸ்ட்: கேப்டன் சுப்மன் கில் விலகல்

image

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து கேப்டன் சுப்மன் கில் விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. <<18331700>>கழுத்து வலிக்கு<<>> சிறப்பு சிகிச்சை பெற அவர் மும்பை சென்றுள்ளதாகவும், பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாளை தொடங்கும் கவுஹாத்தி டெஸ்டில் கேப்டனாக பண்ட் செயல்படுவார் என்றும், பேட்டிங் வரிசையில் கில்லுக்கு பதிலாக சாய் சுதர்ஷன் இடம்பெறுவார் எனவும் கூறப்படுகிறது.

error: Content is protected !!