News March 18, 2024
திருவண்ணாமலை கிரிவலம் எப்போது செல்லலாம்?

திருவண்ணாமலை என்றதும் நினைவிற்கு வருவது அண்ணாமலையாரும், கிரிவலமும் தான். மற்ற எந்த தலங்களிலும் இல்லாத தனிச்சிறப்பாக இங்கு மட்டுமே பக்தர்களுடன் சேர்ந்து அண்ணாமலையாரும் கிரிவலம் செல்லும் உற்சவம் நடைபெறும். கைலாயத்தை வலம் வந்து வணங்கியதற்கு சமமான பலனை தரக் கூடியது கிரிவலம். எப்போது கிரிவலம் சென்றாலும் உயர்வான பலன் கிடைக்கும். என்றாலும் பெளர்ணமி நாட்களிலே அதிகளவில் பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
Similar News
News October 20, 2025
தீபாவளி விடுமுறை.. புதன் கிழமையும் வந்தது அறிவிப்பு

தீபாவளி விடுமுறையையொட்டி 100-க்கும் மேற்பட்ட சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தற்போது, ஊர் திரும்ப ஏதுவாக புதன்கிழமையும் (அக்.22) சிறப்பு ரயில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. நெல்லையிலிருந்து இரவு 11:55 மணிக்கு புறப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில், சென்னைக்கு அடுத்த நாள் காலை 10:55 மணிக்கு வந்துசேரும். மறுமார்க்கத்தில் அக்.23 பகல் 12:30 மணிக்கு புறப்பட்டு, நள்ளிரவு 12:05 மணிக்கு நெல்லை சென்றடையும்.
News October 20, 2025
முதல்முறை முதலீட்டாளர்களே.. முகூர்த்த நேரம் குறிச்சாச்சு

பங்குச்சந்தையில் முதல்முறையாக முதலீடு செய்ய உள்ளீர்களா? தீபாவளியை ஒட்டி, முகூர்த்த நேரத்தில் தொடங்கினால், உங்கள் முதலீடு இரட்டிப்பாகும், பொருளாதார வளர்ச்சியும் காணலாம். இதன்படி, நாளை மதியம் 1:45 PM – 2:45 PM என்ற முகூர்த்த நேரத்தில், பங்குச்சந்தையில் உங்கள் முதலீட்டை தொடங்குங்கள். அதேநேரம், அக்.22 பங்குச்சந்தை விடுமுறை, அக்.23 முதல் வழக்கம்போல் பங்குச்சந்தை ஓபன் ஆகும்.
News October 20, 2025
FLASH: இந்தாண்டு ₹7,000 கோடிக்கு பட்டாசு விற்பனை

நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த ஆண்டை விட இந்தாண்டு ₹1,000 கோடி கூடுதலாக, அதாவது ₹7,000 கோடிக்கு பட்டாசுகள் விற்பனையாகியுள்ளதாக பட்டாசுகள் வணிக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. 7 ஆண்டுகளுக்கு பிறகு டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டதும் ஒரு காரணம் என சொல்லப்படுகிறது. இந்த தீபாவளி சிவகாசி மக்களுக்கு உண்மையிலேயே சரவெடிதான்..